இந்தியா : இந்துத்துவ கலவரக் காடு?

நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கு வந்தால் நாடெங்கும் மதக் கலவரங்கள் நடக்கும். சமூக அமைதி பாழ்பட்டுப் போகும். பொய், புரட்டுகள் மூலம் சமூக நல்லிணக்கம் குலைக்கப்பட்டு, மனதளவிலேயே வேற்றுமைகள் வளர்க்கப்பட்டுவிடும் என்றெல்லாம் சமூக அக்கறையாளர்கள் அச்சத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நரேந்திர மோடியைப் பிரதமர் பதவிக்குக் கொண்டு வருவதற்காகவே இத்தகைய கலவரங்கள் முன்னெடுக்கப்படும் என்ற நிலை இப்போது மேலும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

மேலும்....

மோடி விளம்பரம் : தேன் தடவிய விஷ உருண்டை

ஆர்.எஸ்.எஸ். என்ற ஹிந்துத்துவா, ஹிந்து ராஷ்டிரம் என்பதையே மய்யப்படுத்தி இந்தியாவை ஹிந்துஇயாவாக மாற்றத் துடிக்கும் அமைப்பின் அரசியல் பிரிவு – உருவாக்கம்தான் பாரதீய ஜனதா (BJP) என்பது.

எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் இல்லாத விசித்திர நிலை பா.ஜ.க.வுக்கு; அது சுதந்திரமாக இயங்கும் அரசியல் கட்சி அல்ல; மாறாக, அதன் மூக்கணாங் கயிறு ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் கையில்தான் உள்ளது.

பிரதமராக யார் (பிஜேபி மூலம்) வருவது என்பதை மட்டுமல்ல; யாருக்கு எந்தத் துறை (இலாகா) அளிப்பது என்பதைக்கூட ஆர்.எஸ்.எஸ். எஜமானர்கள்தான் நிர்ணயிக்க வேண்டும்; அதனை அப்படியே செயல்படுத்துவது மட்டும்தான் பா.ஜ.க.வின் வேலை!

மேலும்....

போப் ஆண்டவர் முதல் ‘கேப்’ ஆண்டவர் கணபதி அய்யர் வரை

உலகில் பல அரசர்கள் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும் மேற்குலகில் ஆதிக்கம் மாறாது ஆட்சி செலுத்திவருவது போப் எனப்படும் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர். வாடிகன் தான் உலக கத்தோலிக்க திருச்சபைகளின் தலைநகரம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. போப் என்றால் தந்தை என்று பொருள். சரி இப்போது விசயத்திற்கு வருவோம். இந்தப் பதிவு போப் ஃபிரான்ஸிசின் சமீபத்திய ஒரு பேட்டியைக் குறித்தது என்பதால் கடந்த காலத்தில் வாடிகனில் நிகழ்ந்த, பதிவுக்குக் கொஞ்சமாய் சம்பந்தமுள்ள ஒரு சம்பவத்துடன் ஆரம்பிப்போம்.

மேலும்....

விநாயகர் ஊர்வலத்தால் விளைந்த கேடுகள்

விநாயகர் ஊர்வலம் என்றாலே மும்பைதான் நம் மனதில் நிழலாடும். உண்மையில் மும்பைக்கும் விநாயகருக்கும் பெரிய நூற்றாண்டுத் தொடர்பு இல்லை. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று முழங்கிய பால கங்காதர திலகர், 1894ஆம் ஆண்டு பூனேவின் முதலாவது விநாயகர் ஊர்வல கமிட்டி ஒன்றை அமைத்தார் (Sarvajanik Ganeshotsav). அதுவரை மராட்டியப் பார்ப்பனர் மட்டும் விநாயகர் சிலையை வைத்து பூசை செய்து வந்தனர். பிறர் சிலையைத் தொடுவதற்குக் கூட அனுமதி இல்லை.

மேலும்....