குடிஅரசு’ நூற்றாண்டைக் கொண்டாடுவோம்! -… முனைவர் கடவூர் மணிமாறன் ..

குடிஅரசாம் இதழ்தொடங்கி நூறாம் ஆண்டைக் கொண்டாடித் தமிழர்நாம் மகிழு கின்றோம்! தடியாக விளங்கியது; பெரியா ருக்கோ தன்மதிப்புப் பேரியக்க வாளா யிற்று! இடஒதுக்கீட் டுரிமையினை எழுப்பி வந்த இனமானப் போர்முரசம் இதுவே ஆகும்! அடிமையென வாழ்ந்திட்ட தமிழர் எல்லாம் ஆர்த்தெழவே செய்திட்ட ஏடும் ஆகும்! பெரியார்மண் திராவிடமண் இதுவே என்று பேசவைத்த குடிஅரசாம் இதழின் மூலம் அறிவுக்குத் தடையாக மனித நேய அன்புக்குத் தடையாக இருந்த வற்றைச் சரியாக ஏற்புடனே முறிய டித்தார்! சழக்கினராம் பார்ப்பனரின் புரட்டை […]

மேலும்....

தகிக்கும் தாய்மனப் புழுக்கங்கள்!

மனநலம் எவ்வழியோ அவ்வழியே உடல்நலம் என்பதை ஊரில் எத்தனை பேர் உணர்ந்தோம் என்பது விளங்கவில்லை! தலை வலி, வயிறு வலி என்று தனித்தனியே அந்தந்த மருத்துவர்களிடம் மருத்துவம் பார்க்க ஓடும் நாம், “எனக்கென்ன பைத்தியமா?” என்று வீம்பு காட்டாமல் மனநல மருத்துவர்களிடம் சென்று மனம் விட்டுப் பேசி தீர்வு காணுதலையும் இயல்பாக்கிக் கொள்ள வேண்டும். நிற்க, இப்போது சொல்ல வருவது இன்னொன்று! அதிகமாகப் படம் பார்க்கும் பழக்கம் இல்லாவிட்டாலும் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியது அண்மையில் வெளிவந்த J.பேபி […]

மேலும்....

வெளிச்சம்… ஆறு. கலைச்செல்வன் …

“தாத்தா, நான் மாநில அளவில் நடைபெற இருக்கும் கபடி போட்டியில் கலந்துகொள்ள அடுத்த மாதம் சென்னை போகிறேன்.” கட்டிலில் படுத்திருந்த செல்வம் மெதுவாகத் தலையைத் திருப்பி குரல் வந்த திசையைப் பார்த்தார். கதவருகே அவரின் பெயர்த்தி இதழ்யா புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தாள். “என்னம்மா சொன்னே, சரியா கேட்கல. திரும்பவும் சொல்லு” என்றார். “மாநில அளவில் கபடி போட்டி சென்னையில் அடுத்த மாதம் நடக்க இருக்கு. நான் அதில் கலந்துகொள்ளப் போகிறேன்” என்று சொல்ல வந்த செய்தியை மீண்டும் சொன்னாள் […]

மேலும்....

வடமொழி மயக்கறுத்த பல்கலைப் புலவர்- பேராசிரியர் க. அன்பழகன் எம்.ஏ.,

தமிழர்களின் உள்ளம், உரை, செயல் அனைத்திலும் உறையத் தொடங்கிய தாழ்வு மனப்பான்மையை அகற்றவும், பண்டை நாட்களிலே தமிழர் தம் அறிவு பல்வேறு துறையிலும் மேலோங்கிச் சிறந்திருந்தது என்பதைத் தமிழர்கள் உணர்ந்து, தாய்மொழியைக் குறித்து ஒரு பெருமித எண்ணத்தோடு தலைநிமிர்ந்து வாழவும் உறுதுணையாக நின்றவர் பல்கலைப் புலவர் கா.சுப்பிரமணிய பிள்ளை அவர்களாவார். அவர் இளமையிலேயே தெளியக் கற்று தமிழுடன் ஆங்கிலத்திலும் முது கலைஞராய்த் தேர்ந்து, சட்டத்துறையிலும் பேரறிஞராய்ச் சிறப்புப் பெற்று தாகூர் சட்ட விரிவுரையாளர் என்னும் பெருமையுடன் விளங்கினார். […]

மேலும்....

இயக்க வரலாறான தன் வரலாறு ( 339 ) புதுக்கோட்டையில் தந்தை பெரியார் சிலை திறப்பு

தஞ்சாவூர் – வல்லம் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் இணையர்களான இராசேந்திரன்- பகுத்தறிவு ஆகியோரால் பிள்ளையார்பட்டி டாக்டர் எம்.ஜி.ஆர். நகரில் கட்டப்பட்ட புதிய இல்லத்தை 16.2.2005ஆம் தேதி புதன்கிழமை மாலை 5:30 மணியளவில் மோகனா வீரமணி அவர்கள் தலைமையில் கல்லூரி முதல்வர்கள் டாக்டர் நல். இராமச்சந்திரன், டாக்டர் ச.இராசசேகரன் ஆகியோர் முன்னிலையில் நாம் திறந்து வைத்தோம். உரிமையாளர்களின் விருப்பப்படி இல்லத்திற்கு “மோகனா இல்லம்“ என்று பெயர் சூட்டப்பட்டது. காஞ்சிபுரம் தந்தை பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் […]

மேலும்....