பாவலர் பாலசுந்தரம்

செப்டம்பர் 1-15

1933 இல் இயக்கத்தில் இணைந்து சொற்பொழிவாளராகவும், எழுத்தாளராகவும், கவிஞராகவும், சிறந்த களப் பணியாளராகவும் விளங்கியவர் பாவலர் பாலசுந்தரம்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தொடங்கி தந்தை பெரியார் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றவர். 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் 6 மாதமாக குறைக்கப்பட்டு, சிறைவாசம் அனுபவித்தவர். 1957இல் தந்தை பெரியார் அறிவித்து நடத்திய ‘பிராமணாள்’ அழிப்பு போராட்டத்தில் பங்கேற்று சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்.

‘தமிழ் அரசு’ என்னும் இயக்கத் பத்திரிகையையும், ‘தென்சேனை’, ‘வாழ்வு’ போன்ற இதழ்களையும் நடத்தியவர். ‘முரளிஸ் கபே’ உரிமையாளர் தந்தை பெரியாரை சந்தித்து மன்னிப்புக் கேட்ட தகவலை தமது எட்டில் பதிவு செய்துள்ளவர்.

இவரது துணைவியார் பட்டம்மாள் பாலசுந்தரம் அவர்களும் இந்தி எதிர்ப்பில் தொடங்கி எல்லா நிகழ்வுகளிலும் பங்கேற்றவர். சட்ட எரிப்பு போரில் ஈடுபட்டு சிறை சென்றவர். பெரியார் திடலில் தங்கி இறுதி காலம் வரை பணியாற்றியவர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *