செ.தெ.நாயகம்

அக்டோபர் 01-15

 

தந்தை பெரியாரின் தொடக்க நாள் தோழராக சுயமரியாதை இயக்கத்தின் தளபதியாக இருந்தவர் சி.டி.நாயகம் எனும் செ.தெ.நாயகம் அவர்கள், நெல்லை மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 1878ஆம் ஆண்டு பிறந்தவர்.

சென்னைக்கு வந்து ஆசிரியராகப் பணியாற்றி, நீதிக்கட்சியில் ஈடுபாடு கொண்டு சமூகப் பணியாற்றியவர். பின்னர் கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளராக, பதிவாளராக பணியாற்றி, அந்தத் துறைகளில் வகுப்புரி மையைக் கொண்டு வந்தவர். ஓய்வுக்குப் பின் நேரடியாக சுயமரியாதைப் பணியாற்றியவர்.
1938இல் ஆச்சாரியார் இந்தியைத் திணித்த போது, அதை எதிர்த்து தந்தை பெரியார் போராடியபோது, அந்தப் போராட்டக் களத்தின் முதல் சர்வாதிகாரியாகப் பெரியாரால் நியமிக்கப்பட்டு, போராடி சிறை சென்றவர்.

தந்தை பெரியாரின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவர் என்பதற்கான சான்றினைக் கூற வேண்டுமானால், தந்தை பெரியார் 1949ஆம் ஆண்டு சட்டரீதியாகத் திருமணம் என்னும் ஏற்பாட்டினைச் செய்தபோது, அவர் தேர்வு செய்த இடம் சி.டி.நாயகம் அவர்களின் வீடாகும்.

அவரது பிறந்த நாள் அக்டோபர் 7, (1878).

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *