அறிவுப்பெருஞ்சுடர்!

செப்டம்பர் 01-15

பெரியார் என்பவர்
விடுதலை வெளிச்சத்தின்
விளம்பரப் பலகை!
மூட முதுகுகளை
முன்னெழ நிமிர்த்திய
முற்போக்கு வார்த்தை!

பெரியாரின் கருஞ்சட்டை
பச்சைத் தமிழர்கள்
சிவப்புச் சிந்தனை!

பெரியாரின் வெண்தாடி
பகுத்தறிவு தேசத்தின்
வரைபடம்

வாள் கொண்ட சமூகம்
நூலால் சரிந்தபோது
அவருடைய கைத்தடியே
தாங்கிப்பிடிக்கும் தாயாயிருந்தது!

பெரியாரின் கையிலிருந்தது
கைத்தடி அல்ல
காலச்சக்கரத்தின்
கருத்து அச்சாணி!

பெரியாரின் கேள்விகள்
பாமர மக்களின்
பதிலுக்காகக் கேட்கப்பட்டவை!

பெரியார் ஒருவர்தான்
சோகங்களிலிருந்து
சொந்தங்களை விடுவித்தவர்!

புராணக் குப்பைகளை
பொசுக்கிப் போட்ட
அறிவுப் பெருஞ்சுடர்!

                                                                           

                                                                                                            

                                                                                                             – புரட்சிப் பாவலர் யுகபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *