ஏடாகூடம் ஏதுசாமி

ஜூன் 16-30

திருப்பதியில் மொட்டை போட்ட ஆந்திர முதல்வர் கிரண்குமார்! – செய்தி

வெயிலுக்கு மொட்டை போட்டா நல்லாயிருக்கும்னு அவர் போட்டாரு… அதுவும் அவங்க ஊரு மலைமேலேயே இலவசமா போடுறாங்கன்னு அங்க போய் போட்டாரு… இதப்பாத்துட்டு, உ.பி., பீகார்லேர்ந்து ஆயிரக்கணக்குல செலவு செஞ்சு ஆந்திராவில வந்து மொட்டை போடுறீங்களே…

*******************

கறுப்புப் பணத்திற்கு எதிராக பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் – செய்தி

பின்ன, காவி உடுத்தி, உடம்பை வளைச்சி, நெளிச்சு யோகா கத்துக் கொடுத்து பக்தர்கள் கிட்டயிருந்து அவர் கறுப்புப் பணம் சேர்க்கிறாரு.. ஆனா, உடம்பே வளையாம, கஷ்டப்படாம இந்த அரசியல்வாதிங்க கறுப்புப் பணம் சேர்த்தா, இவருக்குக் கோபம் வராதா, என்ன?

*******************

குடிநீர்க் குழாயில் பெட்ரோல் ஊற்றியவர்களைக் கண்டுபிடிக்க நூதன வழிபாடு: அம்மனுக்கு மிளகாய் அரைத்துப் பூசி, பூஜை செய்ய ஊர்மக்கள் முடிவு! _செய்தி
அடப்பாவிகளா… உங்களையெல்லாம் திருத்தவே முடியாது… பெட்ரோலுக்கும், மிளகாய்க்கும் என்னய்யா சம்பந்தம்… மிளகாயை அரைச்சி கல்லுக்குப் பூசுனா என்ன ஆகப்போகுது…? இதுவரைக்கும் அந்த அம்மன் யாரையாவது தண்டித்ததை நிரூபிக்க முடியுமா?

– கருத்தும் படமும்: கர்ணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *