மாதவிடாய் பெரும்போக்கு கட்டுப்படுத்த!

ஆகஸ்ட் 01-15

மாதவிடாய் நாளில் வாழைப் பூ, பச்சை சுண்டைக்காய், வெண்டைக்காய் ஆகியவற்றைக் காரமில்லாமல் சமைத்து உண்டு வர அதிக உதிரப்போக்கு நிற்கும். பெண்களின் வெள்ளைப்படுதல் நோய்க்கும் இந்த உணவு முறைகள் பொருந்தும்

3 கிராம் மாம்பருப்பைப் பாலில் அரைத்துச் சாப்பிட அதிக உதிரப்போக்கு நீங்கும்.

மாதுளம் பழத்தோலை 5 கிராம் அளவில் அரைத்துப் புளிப்பு மோரில் கலந்து சாப்பிடலாம்.

மாம்பூ, மாதுளம் பூ, வாழைப் பூ மூன்றையும் சம அளவு எடுத்துச் சிறிது உப்பு, புளி, மிளகாய், பூண்டு, இஞ்சி, பெருங்காயம் சேர்த்து அரைத்து, உணவுடன் சாப்பிடலாம்.

3 கிராம் நாவல் கொட்டையைப் பாலில் அரைத்துச் சாப்பிட உதிரப்போக்குக் கட்டுப்படும்.

கொய்யாத் துளிர் இலை  1, மாதுளம் துளிர் இலை  1, மாந்துளிர் இலை  1, இம்மூன்றையும் ஒன்றாக அரைத்துப் புளிப்பு மோரில் கலந்து சாப்பிட்டு வரலாம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *