உளவு விமானம்

ஏப்ரல் 16-30

மணிக்கு 37 கி.மீ. வேகத்தில் பறந்து சென்று பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தைத் தெரிந்து தாக்குதல் நடத்தும் 300 கிராம் எடையுள்ள ஆளில்லா உளவு விமானங்களை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) தயாரித்து வருகிறது. 30 முதல் 100 மீட்டர் உயரம் வரையிலும் பறக்கும் இந்த உளவு விமானத்தின் மூலம் 2 கி.மீ. சுற்றளவு தூரத்தில் நடப்பனவற்றைக் கண்காணிக்கலாம். பகல், இரவு நேரங்களில் மிகத் துல்லியமாகச் செயல்படும் கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகவும் எடை குறைந்த ஆளில்லா உளவு விமானம் என்ற சிறப்பைப் பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *