சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

செப்டம்பர் 01-15

நூல்: எது சிறந்த உணவு?

ஆசிரியர்: மருத்துவர். கு.சிவராமன்

வெளியீடு: பூவலகின் நண்பர்கள்,

முகவரி: ஏ 2, அலங்கார் பிளாசா,
425, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை,
கீழ்ப்பாக்கம், சென்னை -_ 10.
பேசி: 044-2646 1455

www.poovulagu.org.
info@poovulagu.com
விலை: ரூ.15./

எந்த சுவை என்ன பயன்?

உன் நண்பன் யார் என்று சொல். நீ யாரென்று சொல்கிறேன் என்பது பழைய மொழி. நீ எதை விரும்பிச் சாப்பிடுகிறாய் என்று சொல். நீ யாரென்று சொல்கிறேன் என்பது ஆரோக்கியப் புதுமொழி. நாம் உண்ணும் உணவைப் பொறுத்து நம் மனதையும் உடல் நலத்தையும் அனுமானிக்க முடியும். எனக்கு இனிப்பு பிடிக்கவே பிடிக்காதுப்பா… கசப்பா…? அய்யோ! நான் அந்த பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்டேன், எனும் நம் விருப்பு வெறுப்புகள் எல்லாம் நம் உடலை எந்த நோயினை நோக்கி நகர்த்துகின்றன என்பதை நம் நாட்டு பாரம்பரிய மருத்துவ முறைகள் மிக உறுதியாகச் சொல்லியிருக்கின்றன. ஒவ்வொரு சுவைக்கும் சில மருத்துவ குணங்கள் இருக்கின்றன. சிலவற்றில் நோய் உண்டாக்கும் தன்மைகள் உள்ளன.

உணவுக்காகப் பக்குவமாகச் சமைக்கையில் ஒவ்வொரு தானியங்கள், காய், கனிகளின் சுவைகளின் கலவையால் வரும் கலப்பு சுவைகளிலும் தனித்துவ நலப்பயனும், நோய்க் கூறும் உள்ளன. உணவு சமைக்கின்ற ஒவ்வொருவரும் இந்த சுவை குறித்த தெளிவான அறிவைப் பெற்றிருப்பது மிக மிக முக்கியம். உணவைத் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொருவருக்கும், இந்த டேஸ்ட் எனக்கு என்ன செய்யும்? என்ற அறிவைப் பெற்றிருப்பதும் மிக மிக அவசியம். இனிப்பு, உப்பு, புளிப்பு, கார்ப்பு(காரம்), கசப்பு, துவர்ப்பு எனும் இந்த ஆறு சுவைக்குப் பின்னே உள்ள சுவையான நலவாழ்விற்கான விஷயங்களை இதில் சுவைக்கலாம்.

ஆறு சுவை என்பன மனங்களிக்க உருவானதோ, உருவாக்கப்பட்டதோ அல்ல. ம்ம்..யம்மி..ம்ம்மி என குழந்தை சுவைப்பதால் மட்டும் ஒரு சுவையை நாம் ஏற்றாக வேண்டும் என்பதுமல்ல. ஒவ்வொரு சுவை உருவானதும் இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பூதங்களின் கலவையால்தான். பூதம் என்றதும், இதுவரை நல்லாத்தானே போய்ட்டு இருந்தது..? ஏதோ பேய் பூதமெல்லாம் பற்றி சொல்ல வாரார் என்று பதற வேண்டாம். இந்த பூதம் உலகை உருவாக்கும், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களைப் பற்றியது.

இந்த அய்ம்பூதங்களில், மண்ணும் நீரும் சேர்ந்து இனிப்பு சுவை வந்தது. மண்ணும் தீயும் சேர்ந்து புளிப்பு சுவை தோன்றியது. நீரும் தீயும் சேர்ந்து உப்பு வந்தது. காற்றும் ஆகாயமும் சேர்ந்து கசப்பு வந்தது. தீயும் காற்றும் சேர்ந்து காரம் பிறந்தது. மண்ணும் காற்றும் சேர்ந்து துவர்ப்பு உருவானது… இப்படி பஞ்ச பூதங்களின் கலவையால்தான் ஆறு சுவைகளும் தோன்றின. இனிப்பாக இருக்கும் அய்ஸ்கிரீம் சாப்பிட்டால் அதில் நீர் பூதமும் இருக்கிறதென்று இப்போது புரிகிறதா? அதைச் சாப்பிடுகையில் அந்த நீர் உன் நுரையீரலுக்குள்ளும் சென்று சளியாக மாறும்  என்பதை தெரிந்து கொள்ளலாம். சுவைகளின் அடிப்படையில் உங்களுடல் நலத்திற்கான சிறந்த உணவுத் தேர்வுதான் பத்தியம்!

சரி, இனி ஒவ்வொரு சுவையும் என்ன என்ன செய்யும் என்பதை கொஞ்சமாகப் பார்க்கலாம். முதலில் இனிப்பு. ஏன் என்றால் அதுதான் முதல் சுவை. தாயின் சீம்பாலில் குழந்தை முதன் முதலில் அடையாளம் காணும் சுவை இனிப்பு. உடல் வளர்க்கும் அற்புத இந்த சுவையை விரும்பாத குழந்தையும் பெரியோரும் அரிது. உடலை ஊட்டப்படுத்தி வளர்த்து பருக்க வைக்கும் இந்த சுவை அளவிற்கு அதிகமானால் கபத்தை அதிகரிக்கும். செரிமானத்தை குறைத்துவிடும்.

பெரியோருக்கு மதுமேக நோயை வரவழைத்து விடும். மதுரமதிகமானால் மலியும் நிணமும் கபமும்தான் என்கிறது ஒரு மருத்துவப் பழம் பாடல். புளிப்பு சுவை இருந்தால், ஏதோ ஒரு அமிலம் அதில் இயற்கையாக உள்ளது என தெரிந்து கொள்ள வேண்டும். எலுமிச்சையின் சிட்ரிக் அமிலமும், தக்காளியின் ஆக்ஸாலிக் அமிலமும் புளியின் டார்டாரிக் அமிலமும் தருவதுதான் அதனதன் புளிப்பு சுவைகள். புளிப்பு சித்த மருத்துவம் சொன்னபடி, பித்தத்தைத் தூண்டி சீரணத்தை நெறிப்படுத்தும் என்ற கருத்தை, இன்றைய உணவு விஞ்ஞானம் இன்னும் கூடுதலாய், புளியில் ஊறவைத்து சமைப்பதனால், காய் கனிகளின் புரதமும், அற்புத குணத்தினால்தான். இனி யாரும் அது ஒரு கசப்பான அனுபவம்! என உங்களுக்குப் பிடிக்காத விஷயத்தைச் சொல்ல வேண்டாம். கசப்பு ஒரு மருந்து! அதே சமயம் கசப்பை அதிக அளவிலும் சாப்பிடுவது வாயுவைத் தோற்றுவிக்கும்.
அளவான காரம் செரிமானத்தை தூண்டும். கபத்தைப் போக்கும். உணர்ச்சியைக் கூட்டும். அதிகபட்ச காரம் உடல் வன்மையை, நரம்பை பாதிக்கும். உடல் உறுப்புகளைத் தளர வைத்துவிடும்.

துவர்ப்பு நாம் பெரும்பாலும் உணவில் அதிகம் சேர்க்காத. ஆனால் மிகவும் உடலுக்கு நல்லதொரு சுவை துவர்ப்பு. புண்ணாற்றி, இரத்தத்தை சுத்தி செய்ய வைப்பதில் இருந்து, உடலை அழிவில் இருந்து காக்கும் anti oxidant தன்மையுடைய  சிறந்த சுவை துவர்ப்புச் சுவை. வாழைப்பூவிலும் நெல்லிக்கனியிலும் நிறைந்து இருக்கும். இந்த சுவையை ஒரு மருத்துவச் சுவை என்றே சொல்லலாம்.

பிரியாணியின் மணத்தைக் கூட்ட என்ன போடலாம்? இந்த டிஷ்க்கு என்ன ட்ரெஸ்ஸிங் செய்து அசத்தலாம் என யோசிக்கவும் வாசிக்கவும் செய்யும் நாம், இந்த உணவின் சுவை வீசிங் உள்ள என் பொண்ணுக்கு ஏத்துக்குமா?… மூட்டுவலி உள்ள அப்பாவிற்கு சரியாக இருக்குமா? என்றும் யோசித்து சமைத்தால் உங்கள் வீட்டுக் கிச்சன்… ஹெல்த்தி கிச்சன்! அதற்கு சுவை குறித்த தெளிவான அறிவு மிக முக்கியம்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *