காலத்தை வென்று நிற்கும் கலைஞரின் சாதனைகள்!-மஞ்சை வசந்தன்

2024 Uncategorized முகப்பு கட்டுரை ஜுன் 1-15 2024
கலைஞர் நூற்றாண்டு நிறைவு பெறும் நிலையில் காலத்தால் மறையாது, என்றென்றும் நிலைத்து நிற்கும் அவரின் நிலையான சாதனைகளை இன்றைய இளைய தலைமுறைக்கு அறிவிக்க வேண்டியது நமது கட்டாயக் கடமை என்ற பொறுப்புணர்வோடு, அவற்றை இங்கு பதிவு செய்துள்ளோம்.
கலைஞர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையாளரை மறைத்தும், திரித்தும், கரித்துக் கொட்டியும் காழ்ப்புகளைக் கக்கிவரும் கயவர்களின் தப்பான கருத்துப் பரப்பு முயற்சிகளை நாம் அவ்வப்போது முறியடித்தாலும், எதிரிகள், அப் பொய்ப் பிரச்சாரங்களை மீண்டும் மீண்டும் பல வகையில் பரப்பி வருவதால், நாமும் அதற்கு எதிர்வினையாக அவரின் சாதனைகளை ஒவ்வொரு தலைமுறைக்கும் தெரிவிக்க வேண்டியது கட்டாயக் கடமை என்பதால் இப்பதிவு இன்றியமையாததாகிறது.
இனஎதிரிகள், கலைஞரின் பெருமைகளை, சாதனைகளை, ஆளுமைத் திறன்களை, மக்கள் நலத் திட்டங்களை மறைப்பது போலவே, அவருக்குத் தொடர்பில்லாத களங்கங்களையெல்லாம் அவர்மீது  சுமத்தி மக்கள் வெறுக்கும்படியாகச் செய்கின்றனர்.
எனவே, கலைஞரின் சாதனைகளை அறிவது போலவே, அவர்மீது சுமத்தப்படும் களங்கங்களையும் விளக்கி மக்களுக்குத் தெளிவூட்ட வேண்டியதும் கட்டாயமாகிறது.
முதலில் கலைஞரின் சாதனைகளைக் கூறி அதன்பின் அவர் மீதான களங்கங்களை அகற்றுவது பொருத்தமாய் இருக்கும் என்பதால், அவ்வகையில் இங்கு கருத்துகளை வைக்க விரும்புகிறோம்.
காலத்தால் அழியாத கலைஞரின் சாதனைகள்
1969 முதல் 1971 வரை
  • பேருந்துகள் நாட்டுடைமை
  • போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கம்
  • அனைத்துக் கிராமங்களுக்கும் மின் இணைப்புத் திட்டம்
  • 1,500 மக்கள் தொகை கொண்ட கிராமங்களை முக்கியமான சாலைகளோடு இணைக்க இணைப்புச் சாலைகள் திட்டம்.
  • குடிசை மாற்று வாரியம்
  • குடிநீர் வடிகால் வாரியம்
  • கண்ணொளி வழங்கும் திட்டம்
  • பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம்
  • கை ரிக் ஷாக்களை ஒழித்து இலவச
  • சைக்கிள் ரிக் ஷாக்கள் வழங்கும் திட்டம்
  • ஊனமுற்றோர் நல்வாழ்வுத் திட்டம்
  • தாழ்த்தப்பட்டோர்க்கு இலவச கான்கிரீட்
  • வீடுகள்
  • இந்தியாவிலேயே முதன்முதலாக காவலர் ஆணையம் (Police Commission) அமைத்தது.
  • பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்
  • டோருக்கும் தனித்தனியாக அமைச்சகம்
  • பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அமைத்து அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 25 விழுக்காட்டிலிருந்து 31 விழுக்காடாகவும், தாழ்த்தப்பட்டோர்க்கான இடஒதுக்கீட்டை 16 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகவும் உயர்த்தியது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்
09.11.1969இல் திருச்சி வெல்லமண்டி மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில், “நாம் தி.மு.க. ஆட்சியை ஆதரித்தாலும், கருவறை நுழைவுப் போராட்டம் நடந்தே தீரும் என்று பெரியார் அறிவித்தார். கடவுள் இல்லை என்பது தி.க. கொள்கையானாலும், கருவறை நுழைவும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்பதும் நமது உரிமை சார்ந்தவை. கடவுளை வணங்கும் எம் இனமக்களின் உரிமை காப்பாற்றப்பட வேண்டும்; சூத்திரத் தன்மை ஒழிக்கப்பட வேண்டும் என்பது எம் கொள்கை” என்று பெரியார் தெளிவுபடுத்தினார்.
பெரியாரின் குருகுலத்தில் பயின்று கொள்கைத் தெளிவும் உறுதியும் பெற்றவர் கலைஞர் என்பதால், பெரியாரின் கொள்கைப்படி, நம் உரிமைகளைக் காக்க அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் இயற்றப்படும் என்று உறுதியளித்தார். கலைஞரின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பெரியார், கருவறை நுழைவுப் போராட்டத்தை விலக்கிக் கொண்டார்.
30.11.1970 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்திலும், சட்டமன்ற மேலவையிலும், “தமிழ்நாடு 1970ஆம் ஆண்டு இந்து சமய அறக்கட்டளைகள் (திருத்த) மசோதாவை (தமிழ்நாடு மசோதா எண் 15/1970), இந்து அறநிலையத்துறை அமைச்சர்  மாண்புமிகு கே.வி. சுப்பையா அவர்கள் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவை அமலாக்க உச்சநீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டது. அதன்பிறகு மீண்டும் 2006இல் ஆட்சிக்கு வந்த கலைஞர் அவர்கள் புதிய சட்டத்தை இயற்றினார். பார்ப்பனர்கள் இதற்கும் முட்டுக்கட்டை போட உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் இந்த வழக்கு ஆமை வேகத்தில் நகர்ந்து, அந்தச் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டு, இன்றைய முதலமைச்சர் அதற்கான நியமன அரசாணையைப் பிறப்பித்து வெற்றி காண்பார்.
அன்று கலைஞர் அவர்கள் வழிவகுத்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை, பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு உள்ளாகி, இறுதியில் அனைத்து ஜாதியினரும் இன்று அர்ச்சகராகும் நிலை ஏற்பட்டுள்ளது கலைஞரின் மாபெரும் வரலாற்றுச் சாதனையாகும்.
1971 முதல் 1976 வரை
  • இந்தியாவிலேயே முதன்முதலாக கோவையில் வேளாண்மைப் பல்கலைக்கழகம்
  • அரசு ஊழியர் குடும்பப் பாதுகாப்புத் திட்டம்
  • அரசு அலுவலர் இரகசியக் குறிப்பேட்டு முறை ஒழிப்பு
  • சேலம் உருக்காலைத் திட்டம்
  • தூத்துக்குடி ரசாயன உரத் தொழிற்சாலை
  • சிப்காட் வளாகங்கள்
  • மக்கள் குறை தீர்க்கும் மனுநீதித் திட்டம்
  • கொங்கு வேளாளர் சமூகத்தினர் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்
  • 1989 முதல் 1991 வரை
  • வன்னியர், சீர் மரபினர் உள்ளிட்டோரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என அறிவித்து, அவர்களுக்கு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு
  • தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கும் வருமான வரம்பிற்குட்பட்டு பெண்ணுக்கும் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி
  • வேளாண்மைக்கு இலவச மின்சாரம்
  • பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம்
  • அரசுப்பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு
  • ஆசியாவிலேயே முதன்முதலாக கால்நடைப் பல்கலைக்கழகம்
  • ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவித் திட்டம்
  • விதவைகளுக்கு மறுமண உதவித் திட்டம்
  • கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்க நிதியுதவி
  • நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
  • நுகர் பொருள் வாணிபக் கழகத்தை நிறுவியமை
  • கருவுற்ற பெண்களுக்கு நிதியுதவி
  • மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையாக மாநில அரசு அலுவலர்களுக்கும் ஊதிய உயர்வு அளித்ததோடு, அதனை முன் தேதியிட்டு வழங்கியது.
  • 10 இலட்சம் மகளிர் பயன்பெறும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் திட்டம்
  • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அமைத்தது
  • பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைத்தது
  • டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் அமைத்தது
1996 முதல் 2001 வரை
  • உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு
  • இரண்டு பெண் மேயர்கள் உட்பட 44 ஆயிரத்து
  • 143 பதவிகளில் பெண்கள் பதவி ஏற்பு, இரண்டு மேயர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மணி.
  • அனைத்துக் கிராமங்களுக்கும் பாதுகாக் கப்பட்ட குடிநீர்
  • கிராமப்புற மாணவர்களுக்குத் தொழில் கல்லூரிகளில் 15 விழுக்காடு இடஒதுக்கீடு
  • ஜாதிப் பூசல்களை அகற்ற பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்
  • கிராமப்புறங்களுக்கு மினி பஸ் திட்டம்
  • அம்பேத்கர் பெயரில் இந்தியாவிலேயே முதல் சட்டப் பல்கலைக்கழகம்
  • சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம்
  • உலகத் தமிழர்களுக்கு உதவிடத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
  • தென் குமரியில் 133 அடி உயரத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலை
  • சென்னையில் “டைடல் பூங்கா”
  • அரசுக்குத் தேவைப்படாத புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டிக் குடியிருந்து வருவோர்க்கு வீட்டுமனை உரிமையாக்கும் சிறப்புத் திட்டத்தின்கீழ் இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு வீட்டு மனைகள்.
  • ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் சென்னைக் கோயம்பேட்டில் நிறுவிட வழிவகை செய்தது.
  • விவசாயத் தொழிலாளர்களுக்குத் தனி நல வாரியம்
  • அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம்
  • பள்ளிச் சிறார்க்கு சத்துணவோடு முட்டை வழங்கியது.
  • மாணவர்களுக்கு இலவசப் பேருந்துப் பயண அட்டை
  • அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்
  • நமக்கு நாமே திட்டம்
  • நலிந்தோர் குடும்ப நலத்திட்டம்
  • காமராசர் ஆட்சிக் காலத்தில்தான் அணைகள் கட்டப்பட்டன. கலைஞர் இதுபோன்ற ஆக்கப்பூர்வ பணிகளைச் செய்தாரா? என்று உண்மைகளை மறைத்துப் பேசும் உலுத்தர்களுக்கு கீழ்க்கண்ட ஆதாரங்களைத் தர விரும்புகிறோம்.
கலைஞர் அவர்களின் 21 ஆண்டுகால ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் 36
  • உப்பாறு அணை
  • மேல் ஆழியாறு அணை
  • சோலையாறு அணை
  • மணிமுக்தாநதி அணை
  • சிற்றாறு அணை
  • கீழ்கொடையாறு அணை
  • மேல்கொடையாறு அணை
  • கடனா அணை
  • பொன்னி ஆறு அணை
  • பரப்பலாறு அணை
  • ராம நதி அணை
  • சன்னாறு அணை
  • கருப்பாநதி அணை
  • எரவங்கலாறு அணை
  • குண்டேரிபள்ளம் அணை
  • ஹைவேயிஸ் அணை
  • பாலாறு அணை
  • பொருந்தலாறு அணை
  • வரதமாநதி அணை
  • வரட்டுப்பள்ளம் அணை
  • வட்டமலைக்கரை ஓடை அணை
  • வெண்ணீர் ஆறு அணை
  • ஆனைக்குட்டம் அணை
  • குதிரையாறு அணை
  • நொய்யல் அணை
  • ராஜாதோப்புகனாறு அணை
  • பொய்கையாறு அணை
  • மொர்த்தனா அணை
  • சோத்துப்பாறை அணை
  • அடவிநயினார்கோவில் அணை
  • சிற்றாறு அணை
  • நன்காஞ்சியாறு அணை
  • செண்பகத்தோப்பு அணை
  • இருக்கன்குடி அணை
  • மாம்பழத்தாறு அணை
2006 முதல் 2011 வரை
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வீதம் மாதம் 20 கிலோ அரிசி; ஒருகோடியே 85 இலட்சம் குடும்பங்கள் பயன்.
22 இலட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி
வீடுகள் தோறும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்
எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள்
மீண்டும் புதுப்பொலிவுடன் 177 உழவர் சந்தைகள், மேலும் புதிதாக 45 உழவர் சந்தைகள் அமைப்பு.
கரும்பு விவசாயிகளுக்குப் போக்குவரத்துக் கட்டணம் மற்றும் ஊக்கத் தொகை சேர்த்து டன் ஒன்றுக்கு ரூபாய் 2000.
மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் புரட்சிகரமான திட்டத்தின்கீழ் 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி –
குண்டாறு இணைப்புத் திட்டம்
  • 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத் திட்டம்
  • விவசாயத் தொழிலாளர் நல வாரியம் உட்பட 31 அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரியங்களில் 2 கோடியே 2
  • இலட்சத்து 21 ஆயிரத்து 564 உறுப்பினர்கள் சேர்ப்பு.
  • ஒரு கோடியே 58 இலட்சத்து 8 ஆயிரத்து 288 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள்
  • சத்துணவுடன் வாரம் 5 நாள் முட்டைகள், வாழைப்பழங்கள்.
  • ஆண்டுதோறும் 24 இலட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கும், 2 இலட்சத்து 99 ஆயிரம் கல்லூரி
  • மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்.
  • தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து.
  • பத்தாம் வகுப்பு வரை பள்ளிகளில் தமிழ்மொழிக் கட்டாயப் பாடம் எனச் சட்டம்- தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை.
  • நூற்றாண்டுக் கனவை நனவாக்கிச் செம்மொழித் தமிழாய்வு மய்யம் சென்னையில் அமைப்பு.
  • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமணத் திட்ட நிதியுதவி 10 ஆயிரம் என்பது 25 ஆயிரம் ரூபாய் என உயர்வு.
  • ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் 20 இலட்சத்து 11 ஆயிரத்து 517 ஏழை மகளிர்க்கு
நிதியுதவி.
*அரசு ஊழியர்களுக்கு நான்காண்டுகளில் 2 இலட்சம் ரூபாய் வரை மருத்துவ உதவி வழங்கும் புதிய “மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்”
*இதய நோய், நீரிழிவு நோய், புற்று நோய்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த உடல் பரிசோதனை செய்ய “நலமான தமிழகம்” திட்டம்.
*“உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்” வாயிலாக 2 இலட்சத்து 70 ஆயிரத்து 265 ஏழை மக்களுக்கு 702 கோடி ரூபாய் செலவில் உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள்.
*3 இலட்சத்து 5 ஆயிரத்து 801 படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 240 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
*4 இலட்சத்து 65 ஆயிரத்து 658 இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் புதிய வேலை வாய்ப்புகள்
அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் 210 கோடி ரூபாய் செலவில் 420 பேரூராட்சிகளில் கட்டமைப்புப் பணிகள்.
*இஸ்லாமியர் சமுதாயம் மேன்மை பெற 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு.
அருந்ததியினர் சமூகத்தின் அவலம் தீர 3 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு.
சமத்துவ சமுதாயம் காணும் நோக்கில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம்.
மதுரை மாநகரில் முதன்முதலாக உயர்நீதிமன்றக் கிளை அமைத்து அதற்கான கட்டடங்களையும், வேறு பல மாவட்டங்களில் புதிய நீதிமன்றக் கட்டடங்களையும் கட்டியது.
*ஜாதி பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்.
*சென்னை தரமணியில் 338 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகிலேயே மூன்றாவது பெரிய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவை உருவாக்கினார். இது ஆசியாவிலேயே முதலாவது மிகப்பெரிய மென்பொருள் பூங்காவாகும்.
*செய்திகளை அனுப்புவதற்குத் தேவையான அனைத்து நவீன வசதிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. தரை வழியாகவும், செயற்கைக்கோள் வழியாகவும், நுண்ணலைகள் மூலமாகவும் செய்திகளைப் பரிமாறிக் கொள்வதற்கு ஏற்ற வசதிகள் இக்கட்டடத்தின் மேல் தளத்தில் செய்யப்பட்டுள்ளன.
*இந்த மென்பொருள் பூங்கா ரூ.338 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் 15 ஏக்கர் நிலப்பரப்பில் 12.8 இலட்சம் சதுர அடியில் இதற்கான கட்டடம் எழுப்பப்பட்டு இருக்கிறது. மொத்தம் 14 மாடிகள் கொண்டதாக இக்கட்டடம் வானுயர உருவாக்கப்பட்டுள்ளது.
*வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்கள், தமிழ்நாட்டு நிறுவனங்கள் டைடல் பார்க்கில் இடம் பெற்று உள்ளன.
இந்த டைடல் பூங்கா 4.7.2000 அன்று மாலை 7 மணியளவில் திறக்கப்பட்டது.
கலைஞர் மீது சுமத்தப்படும் 
கற்பனைக் களங்கங்கள் : 
கச்சத்தீவு
இன எதிரிகள் தொடர்ந்து கலைஞர்மீது சுமத்தும் வீண்பழி இது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே இருக்கும் பாக் நீர்ச்சந்தியில் (நீரிணைப்பு) (Palk Straits) இந்தியத் தெற்குக் கடற்கரையில் இருக்கும் பாம்பனுக்கும் இலங்கையின் வடக்குக் கடற்கரையில் இருக்கும் டெல்த் (Delft) என்ற தீவிற்கும் இடையே சமதொலைவில் உள்ள சிறு தீவு கச்சத்தீவு.
ஒரு மைல் நீளம்; 900 அடிகள் அகலம்; 3.75 சதுரமைல்கள் பரப்பு. ஆம். கச்சத்தீவு ஒரு சிறு தீவுதான். கற்றாழைகளும் கள்ளிச்செடிகளும்தான் அங்கு மிகுதி. முட்புதர்கள் உண்டு.
இரண்டாம் உலகப் போரின் போது, கச்சத்தீவு பிரிட்டிஷ் கப்பற் படைகள் வெடிகுண்டுகளை வெடித்துச் சோதனை செய்யும் இடமாக இருந்திருக்கின்றது.
1955ஆம் ஆண்டு, இலங்கை அரசு திடீரென்று, கச்சத் தீவினைத் தன் கடற்படை வீரர்களுக்குப் பயிற்சி தரும் இடமாகத் தேர்ந்தெடுத்தது. இந்திய அரசு அந்த முடிவைக் கண்டித்தது.
கச்சத்தீவு தமிழ்நாட்டின் இராமநாதபுரப் பகுதியை ஆண்ட சேதுபதிகளுக்கு வருவாய் தரும் தீவாக இருந்த ஒன்று. 1947இல் ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் வரும் வரை. சேதுபதி ஆட்சியில் இருந்த இந்தத் தீவு, முத்துக்குளிக்கும் இடமாகப் பயன்பட்டு வந்திருக்கின்றது.
இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் காலத்தில் இலங்கையைப் பற்றி வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில் கச்சத்தீவு அவருக்குரியதொன்று என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை மேனாளைய இலங்கை அமைச்சரவைச் செயலாளர் (Secretary of the Cabinet of Ceylon)பி.பி.பியரிஸ் (B.P.Pieris) அவர்களே உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உரிமையான கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்க இந்திய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது என்ற செய்திதான் முதலில் கசிந்தது. இச்செய்தியை ‘விடுதலை’ ஏடு 29.06.1974 தேதியிட்ட தலையங்கத்தில் சுட்டிக்காட்டி எழுதி தமது கொதிப்பை வெளியிட்டது. 1880ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டு வரை இராமநாத சேதுபதிக்கு உரிமையுடையதாய் கச்சத்தீவு இருந்தது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. 1956 மார்ச்சு வரை இலங்கை இத்தீவின்மீது எப்போதும் உரிமை கொண்டாடியது இல்லை.
இப்படிப்பட்ட சூழலில் திடீரென்று இந்தியாவிற்கும் இலங்கைக்கும் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டு, அதன்படி கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்படுவதாகவும், அதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அதிபர் சிரிமாவோ பண்டாரநாயக்காவின் கையொப்பம் பெற, உரிய பத்திரங்களுடன், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சரின் செயலாளர் வேல்சிங் இலங்கை சென்றுள்ளதாகவும் செய்திகள் கசிந்தன.
இச்செய்தி கசிந்தவுடனே கலைஞர் அவர்கள் தமது கண்டனத்தைத் தெரிவித்தார். 23.07.1974இல் டில்லியில் மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் ஒப்பந்த நகலைக் கிழித்து எறிந்தனர்; வெளிநடப்பு செய்தனர். திராவிட முன்னேற்றக் கழகம், முஸ்லிம் லீக், பார்வர்டு பிளாக், பழைய காங்கிரஸ் போன்ற கட்சிகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துப் பேசினர். தி.மு.க. சார்பில் இரா.செழியன் கடுமையாக எதிர்த்துப் பேசினார்.
தி.மு.க. பொதுக்குழு உடனடியாகக் கூட்டப்பெற்று, அக்குழுக் கூட்டத்தில் இந்த ஒப்பந்தத்தைத் திரும்பப் பெற (ரத்து செய்ய) வலியுறுத்தப்பட்டது.
அனைத்துக் கட்சிக் கூட்டம்
கச்சத்தீவை இலங்கைக்கு டெல்லி அரசு தானம் செய்ததை எதிர்த்து அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து 29.6.1974 அன்று சென்னை கோட்டையில் கலைஞர் ஆலோசனை நடத்தினார். “கச்சத்தீவை இலங்கைக்குத் தரக்கூடாது; இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மாற்றியமைக்க வேண்டும்” என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டமன்றத் தீர்மானம்
கச்சத்தீவை இந்தியாவுக்குச் சொந்தமாக்கும் வகையில் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று 21.8.1974 அன்று கலைஞர் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். “கச்சத்தீவு தமிழ்நாட்டிற்குச் சொந்தமானது, இலங்கைக்குத் தரக்கூடாது என்பதை வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது.
உண்மைகள் இப்படியிருக்க, கச்சத்தீவைக் கலைஞர் கொடுத்துவிட்டார் என்று தப்பான பொய்ப்பிரச்சாரம் செய்வது கடைந்தெடுத்த கயமைத்தனமாகும்.
ஈழத் தமிழர்கள் படுகொலை
ஈழத்தில் தமிழர் உரிமைகளுக்காக நடைபெற்ற போராட்டங்களில் தமிழர்களுக்கும்,  தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் உற்ற துணையாய் நின்று, அதற்காக ஆட்சியையும் இழந்தவர் கலைஞர். ராஜீவ் கொலையில் தி.மு.க.வை இன எதிரிகள் தொடர்புப்படுத்தி பரப்பிய பொய்ச்செய்தி, வீண்பழியால், தேர்தலில் படுதோல்வியை தி.மு.க. அடைந்தது. இப்படி ஈழத்தமிழர்களுக்காக  தி.மு.க.வும், தலைவர் கலைஞரும் அடைந்த இழப்புகள் ஏராளம். அப்படியிருக்க, அயல்நாடுகளின் கூட்டுச் சதியுடனும், இந்திய ஒன்றிய அரசின் ஆதரவோடும் நடந்த இலங்கைத் தமிழர் படுகொலைக்குக் கலைஞர்தான் காரணம் என்று இன்றளவும் பழிசுமத்தி வருகின்றனர். மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க. விலகியிருந்தால் ஈழப்படுகொலை நடந்திருக்காது என்பது அப்பட்டமான அறியாமை. தி.மு.க. அமைச்சரவையில் இல்லாமல் விலகி இருந்தால் இன்னும் பேரழிவைத் தமிழர்கள் அடைந்திருப்பர். இந்தியாவே இலங்கையை எதிர்த்திருந்தாலும் சீனாவின் துணையுடன் இனப்படுகொலை நடந்தேயிருக்கும். இலங்கை சீனாவின் பிடிக்குள்  சென்றிருக்கும். உலக அரசியல் நகர்வுகளை உற்று நோக்காமல் ஈழத்தமிழர்கள் படுகொலைக்குக் கலைஞரைக் காரணமாக்குவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஆகும்.
லஞ்சம், ஊழல்
ஊழல் செய்து நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களையெல்லாம் பாராட்டுவதும், எந்த ஊழல் வழக்கிலும் தண்டனை பெறாத கலைஞரை ஊழல் பேர்வழியாய்க் காட்டுவதும் இன எதிரிகளின் பித்தலாட்டப் பிரச்சாரம். கலைஞர் அரசியலில் அமைச்சர் ஆவதற்கு முன்னே தன் திறமையால் பொருள் ஈட்டி தேவையான வசதிகளோடு வாழ்ந்தவர். தன் வீட்டைக்கூட மக்களுக்கே பயன்பட வழிசெய்தவர் கலைஞர் என்பதே உண்மை!
பல்துறை ஆற்றலாளர்இன எதிரிகள் இல்லாத பழியெல்லாம் அவர் மீது சுமத்தி. இணையில்லா அவரின் சிறப்புகளையெல்லாம் மறைத்து. அவர் தமிழ் மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் கேடு செய்தவராக, சூதாகப் பிரச்சாரம் செய்து அரசியல் ஆதாயம் பெற முயலும் அற்பர்களின் சதியை இன்றைய இளைய தலைமுறை முறியடிக்கவேண்டும்.
கலைஞர் போன்று ஆட்சிப் பொறுப்பிலிருந்து தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் நன்மை செய்தவர்கள் எவரும் இல்லை.
சென்னையில் வள்ளுவர் கோட்டம் குமரியில் வள்ளுவர் சிலை, பூம்புகார் நினைவுச் சின்னங்கள் அமைத்து தமிழர்க்குப் பெருமை சேர்த்தவர்.
உலக அளவில் வியக்கப்படும் அண்ணா நூலகம் அமைத்தவர்
வாழ்நாள் முழுக்க எழுதித் தமிழுக்குத் தொண்டு செய்தவர். திரைத்துறையிலும் நிகரற்ற சாதனைகள்
பல புரிந்தவர். பேச்சுத் திறத்தில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்.  அனைவரின் கருத்தையும் கேட்கும்
பண்பாளர். இறுதியில் சுயமாக முடிவெடுக்கும்  கூர்மை உடையவர். இந்திய அரசியலையே தன் ஆளுகையில் வைத்திருந்தவர்.
குடியரசுத் தலைவர், பிரதமர் என்று பலரும் அவரை நாடிவந்து மதித்தது மட்டுமல்ல; புட்டபர்த்தி சாயிபாபாவே அவரைத் தேடி இல்லத்திற்கு வந்து சந்தித்தார் என்றால் கலைஞரின் பெருமைக்கு வேறு என்ன சான்று வேண்டும்!
இப்படி இணையில்லா சாதனைகளை ஏராளமாய்ச்  செய்த கலைஞரின் சாதனைகளில் முதன்மையான சாதனை தனக்குப்பின், தம்மிலும் தம் மகன் மு.க.ஸ்டாலின் அவர்களை உலக சாதனைகள் புரியும் வண்ணம் உருவாக்கியதுதான்.
“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்”
என்ற குறளுக்கு ஏற்ப இச்சாதனையைக் கலைஞர் படைத்துச் சென்றதுதான் வியப்பிலும் வியப்பான சாதனையாகும்!
கலைஞரைப் போலவே, அவரது மகனான
மு.க. ஸ்டாலின் அவர்களும்,
“இவன் தந்தை என்னோற்றான் கொல் எனுஞ் சொல்” என்ற குறளுக்கு ஏற்ப, இப்படிப்பட்ட பிள்ளையைப் பெற எவ்வளவு கடும் உழைப்பைத் தந்தாரோ என்று வியக்கும் வண்ணம் தம் சாதனைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும், தமிழ்மொழிக்கும் அழியாப் பெருமை சேர்த்தவர், தொண்டாற்றியவர் கலைஞர் என்பது உலகு உள்ளளவும் நிலைக்கும்!
வாழ்க கலைஞர் புகழ் !