அறிவுக்குப் பொருந்தா செயல்தான் செய்தே…

ஜூலை 01-15

ஆண்டவன் பெயரைச் சொல்லிச் சொல்லிச்
அறிவுக்குப் பொருந்தா செயல்கள் செய்வார்
உதட்டை நாக்கை உடலுறுப்பை
கம்பிகளாலே குத்திக்குத்தி கொள்வார்
நெருப்பின் மீதே நடந்து செல்வார்
எல்லாம் இறைவன்
செயல் என்பார்
கிளியின் உத்தரவை
பெற்றே தான்
காரியமாற்றப் புறப்படுவார்
மனிதநேயம் மறந்திடுவார்
மதப்பிடிதனிலே வாழ்ந்திடுவார்
இலவசமாய் செருப்பு
கிடைத்துவிட்டால்
காலை செருப்பிற்கேற்றாற் போல்
கனப்பொழுதினிலே
வெட்டிக் கொள்வார்
சிந்தனை யற்ற செயல்களாலே
உயிரைக் கூட இழந்திடுவார்
சலனம் அடையும் மனிதனுக்கு
சாந்தப்படுத்திட
சோதிடம் சொல்வார்
மூன்றாம் பிறவி செயல்களுக்கு
இந்தப் பிறவியில் வகை காண்பார்
அடிமைத்தனத்தை
ஏற்றுக் கொள்வார்
அச்சம் கொண்டே வாழ்ந்திடுவார்
புதுமை அறிந்திட மறுத்திடுவார்
புவியில் மருண்டே வாழ்ந்திடுவார்
அறிவு ஆசான் பெரியாரின்
ஆற்றல் நிறைந்த வழி தன்னை
ஆய்ந்தே நீயும் ஏற்றுக் கொண்டால்
அகிலத்தில் நீயும் முழு மனிதன்

சு.ஆறுமுகம், திருவாரூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *