கடவுள் வாழும்(?) கோவிலிலே…

பிப்ரவரி 16-29
  • சென்னை ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகரில் உள்ள சுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிசேகத்தில் கலந்து கொண்ட வி.வி.காலனியைச் சேர்ந்த கமலவேணியின் 4 பவுன் சங்கிலியும், மோகனபுரியைச் சேர்ந்த சுசீலா என்பவரின் 4 பவுன் சங்கிலியும் மர்ம நபர்களால் பறித்துச் செல்லப்பட்டுள்ளன.
  • தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே பச்சையப்பன் கொட்டகை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் போடப்பட்டிருந்த தாலி மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
  • கல்பாக்கத்தை அடுத்த லட்டூர் கிராமத்தில் உள்ள படுகள செல்லியம்மன் கோவிலில் அம்மன் சிலையில் இருந்த 18 கிராம் தாலிச் சங்கிலி திருடப்பட்டதுடன், உண்டியல் உடைக்கப்பட்டு பணமும் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. அதன் அருகில் உள்ள மாரியம்மன் கோவில் உண்டியல் பணமும் கொள்ளையடிக் கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியின் அருகில் உள்ள குடிபேரம்பாக்கம் கிராமத்தின் காளி கோவிலிலும் அம்மனின் தாலி மற்றும் பூஜைப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
  • சென்னை, புதுவண்ணாரப்பேட்டையில் (திருவொற்றியூர் நெடுஞ்சாலை) உள்ள லட்சுமி அம்மன் கோவில் பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து சாமியின் வெள்ளி கிரீடம், தங்கத் தாலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *