புதுப்பாக்கள்

பிப்ரவரி 01-15

அய்யகோ!

பசியோடு
கந்தல் உடை
அணிந்து வந்த
பிச்சைக்காரனை
விரட்டுகிறான்…
சூடான இட்லியும் வடையும்
காகத்திற்கு
எடுத்து வைத்து
தனது முதல் வியாபாரத்தைத்
தொடர்ந்த கடைக்காரன்

* * * * * * * *

தூக்கில்
தொங்கியும்
சாகவில்லை
தண்ணீர்க் குடம்…

* * * * * * * *

யாராக இருக்கும்…?
பக்தனின் நெஞ்சம்
பதை பதைத்தது
வீட்டு வாசலில்
அறுத்து வைக்கப்பட்ட
எலுமிச்சை…!!

* * * * * * * *

கருவறைக்குள் நுழையாதே!
பார்ப்பன நரிகளின்
ஊமைக் காமக் களியாட்ட தேவநாதன் கைதான பிறகு
காரணம் தெரிந்தது…

* * * * * * * *

அறியாமை

நெஞ்சை
சுட்ட வண்ணம்
வட்டமிடும் எண்ணம்
வர மறுக்கும் வட்டி…

* * * * * * * *

பல லட்சம்
செலவு செய்து
கட்டிய வீடு
உடைக்கப்பட
வேண்டியது பூசணிக்காய்
அல்ல…
அச்சம் எனும்
அறியாமை…

* * * * * * * *

உண்டியல்

அவ்வப்போது
கொஞ்சம் கொடுத்து
உதவினேன்
அவசர காலத்தில்
தன் நன்றியினைக்
காட்டியது உண்டியல்..

– பா.இராஜேந்திரன், அருப்புக்கோட்டை

வேலைக்காரி

மழைக்குக் கூட
பள்ளிக்கூடம்
ஒதுங்காத – என்
சகோதரி,நன்றாகத்தான்
பெருக்கு கிறாள்
பணக்காரரின் வீட்டை.

– வெங்கட. இராசா, ம.பொடையூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *