ஏன் அவர் புரட்சிக்கவிஞர் ?
புதுமையான, புரட்சியான கருத்துக்களை, மக்களை பகுத்தறிவுவாதிகளாக்கக் கூடிய கவிதைகளை எழுதியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அவரது கவிதைகள் மனிதனை சிந்திக்கத் தூண்டுகின்றன; முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும், முற்போக்கு சமுதாயத்திற்கு ஏற்றதாகவும் அவரது கவிதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.