ஆசிரியர் பதில்கள்

மார்ச் 16-31

சட்டப்படி, நியாயப்படி போராடினால்

கட்டாயம் கச்சத்தீவை  மீண்டும் பெறலாம்!

கே:    கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் தலைக்கு ஒரு கோடி விலைபேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவரின் குற்றத்திற்கு உரிய சட்டரீதியான தண்டனை என்ன?
    – சீ.லட்சுமிபதி, தாம்பரம்
ப:    இ.பி.கோ சட்டப்படி 7 ஆண்டுகளுக்கு மேல் தரலாம். மற்றபடி நீதிபதிகளைப் பொறுத்தது!
கே:    குளிர்பான நிறுவனங்களுக்குச் சாதகமாய் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பற்றித் தங்கள் கருத்து என்ன?
    – வே.முத்தமிழ்அரசி, திண்டிவனம்
ப:    சட்டப்படி சரியாக இருந்தாலும் சமுதாயக் கண்ணோட்டத்தில் சரியானதல்ல.
கே:    திராவிட ஆட்சியின் 50 ஆண்டுகள் நிறைவையொட்டி திராவிட ஆட்சிகளின் சாதனைகளையும் அவற்றில் தாய்க்கழகத்தின் பங்கையும் இளைஞர்கள் அறியும் வகையில் நூல் வெளியிடுவீர்களா?
    – கெ.நா.சாமி, சென்னை-72
ப:    பொறுத்திருந்து பாருங்கள்.
கே:    வடமாநில தேர்தல்களில், “முதலில் பெரும்பான்மை பலத்தில் வெற்றி என்றனர்; பின் தொங்கு சட்டசபை அமையும் என்றனர்; அடுத்து தோற்றாலும் மத்திய ஆட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை’’ என்ற பி.ஜே.பி.யின் பிதற்றல் பற்றித் தங்கள் கருத்தென்ன?
    – இல.சங்கத்தமிழன், செங்கை
ப:    எதற்கு ஹேஷ்யங்கள்; இவ்வேடு வெளிவந்து படிக்கும்போது உண்மை தெரிந்துவிடும் _ முடிவுகள் வந்துவிடும்.
கே:    தமிழக மாணவர்கள் _ இளைஞர்களின் ‘நீட்’க்கு எதிரான எழுச்சியை மறைத்து, ‘நீட்’ ஆதரவுப் பேட்டிகளை, ஹைட்ரோகார்பன் எதிர்ப்புப் போராட்டத்தை மட்டும் காட்டுவதன் நோக்கம் என்ன?
    – க.க.தென்றல், ஆவடி
ப:    பார்ப்பன ஊடகங்கக்கு திசைதிருப்பல் கைவந்த கலையாகும்.
கே:    மீண்டும் பெரியார் அஞ்சல் வழிக் கல்வியைத் தொடங்கினால் என்ன?
    – த.மணிமேகலை, வியாசர்பாடி
ப:    பெரியார் _ மணியம்மை பல்கலைக்கழகங்களில் நடைபெற்று வருகிறதே!
கே:    ஆர்.எஸ்.எஸ்.; பி.ஜே.பி.க்கு எதிராய் குரல் கொடுப்போரை, தீவிரவாதிகள் என்னும் மதவெறி வன்முறைக் கூட்டத்தின் கூக்குரல் எப்படிப்பட்டது?
    – ந.முல்லைவேந்தன், காஞ்சி
ப:    பார்ப்பன நரித் தந்திரங்களில் இது முதன்மையானது. முன்பு ஈழத் தமிழர் பிரச்சினையில்கூட இப்படித்தான் திசைதிருப்பினார்கள்.
கே:    நீதிபதி ஏ.கே.ராஜன் கச்சத்தீவைத் தாரை வார்த்தது சட்டப்படி செல்லாது என்கிறார். எனவே அதை மீண்டும் மத்திய அரசு பெற்று தமிழரின் நலன் காக்கப் போராடினால் என்ன?
    – தமிழ்இனியன், பழவந்தாங்கல்
ப:    சட்டப்படி, நியாயப்படி போராடினால் வெற்றி நிச்சயம்! ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *