சாயிபாபா சாயம் வெளுத்த சர்க்கார்!

டிசம்பர் 01-15

பிரபல மேஜிக் நிபுணர் பி.சி.சர்க்கார் -_ உலகப் புகழ் பெற்றவர். கடவுள் அவதாரம் என்று கூறி மக்களை ஏமாற்றுவோரின் குறிப்பாக புட்டபர்த்தி சாய்பாபாவின் ஏமாற்றுத் தனத்தை அம்பலப்படுத்திட விரும்பினார்.

சாய்பாபாவைச் சந்திக்க அனுமதி கேட்டார். பதில் இல்லை. என்ன செய்தார் தெரியுமா? அசாமைச் சேர்ந்த ஒரு பிரபல பணக்கார வியாபாரி என்றும், ஆஸ்துமா வியாதி தனக்கு இருக்கிறது; அதனை சாய்பாபா குணப்படுத்த வேண்டும் என்றும் கூறி சாய்பாபா ஆசிரமத்துக்குள் நுழைந்துவிட்டார்.

அசாமி மொழியில் பேசினார்; கடவுள் அவதாரம் என்று சொல்லிக் கொள்ளும் சாய்பாபாவுக்கு மொழி தெரியவில்லை என்று முதற்கட்டமாக அம்பலப்படுத்தி விட்டார்.

தனது நோயைச் சொல்லி திருநீறு வரவழைத்துக் கொடுங்கள் என்று கேட்டார் பி.சி.சர்க்கார். அவர் அன்று கடைசி பக்தர் என்பதால், திருநீறு தீர்ந்துவிட்டது.

என்ன செய்தார் பாபா? ‘சூ மந்திரக்காளி’ போட்டு பலகாரத் தட்டிலிருந்து கொஞ்சம் சந்தனத்தைக் கொடுத்தார். (எல்லாம் அதிவேகமும், தந்திரமும்தான்) பி.சி.சர்க்கார் என்ன செய்தார், தன் கையை அசைத்து ஒரு  ரசகுல்லாவை வரவழைத்து சாய்பாபாவிடம் கொடுத்தார்! (பலகார தட்டிலிருந்துதான்) பாபாவுக்கும், சீடர்களுக்கும் கடும் அதிர்ச்சி! கூச்சல் போட்டார்கள்.

‘பாபா அவர்களே, நான் வேறு யாருமல்ல _ மேஜிக் நிபுணர் பி.சி.சர்க்கார் நான்தான்!’ என்றார். அவ்வளவுதான், பக்கத்திலிருந்த ஒரு வழியாக உள்ளே ஓடிவிட்டார் சாய்பாபா.

(ஆதாரம்: இம்பிரிண்ட் ஜூன் 1987)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *