குற்றாலம் பயிற்சிப் பட்டறையில் தெறித்த அறிவுத் துளிகளில் சில..

ஆகஸ்ட் 16-31

 

திராவிடர்கள்!
இது நமக்கான
சொல்தானா?
எப்படி கண்டுபிடிப்பது?
அந்த சொல்லைக் கண்டு
என்றும் பயந்து அலரும்
ஆரியர்களைக் கண்டுதான்!

திராவிட மொழிகளுக்கு
தமிழ்தான் ஆதி
என்பதற்கு சான்று,
‘தெலுங்கின் தென்பகுதி
கன்னடம் தொடங்கி
மலையாளம் முழுவதும்’
1500 ஆண்டுகளுக்கு
முன்பிருக்கும் கல்வெட்டுகள் முழுவதும்
இன்றும் தமிழில் இருப்பதுதான்!
இந்து மதம் என்றே
ஒன்று கிடையாது!
அதுவொரு திட்டமிட்ட
மோசடி!

இந்து மதம் தாக்கப்பட்டால்
இந்தியாவே உடையும் என்று
அஞ்சுகிறார்கள்
மார்க்சிஸ்ட்டுகள் உட்பட!

இந்து அறநிலையத்துறை
வந்த பிறகுதான்
பார்ப்பனியத்தின்
கொட்டம் அடங்கியது!

தமிழ்நாட்டில் மட்டும்தான்
ஜாதிசங்கத் தலைவர்கள்கூட
தங்கள் ஜாதிப்பெயரை
பெயருக்குப் பின்னால்
போடாமல் இருக்கின்றனர்!

பி.இ. படித்ததால்
பொறியாளராகலாம்!
எம்.பி.பி.எஸ் படித்தால்
மருத்துவராகலாம்!
பி.எல். படித்தால்
வழக்கறிஞராகலாம்!
எதுவுமே படிக்கவில்லை என்றாலும்,
மந்திரி ஆகலாம்!
பெரியாரைப் படித்தால் மட்டும்தான்
மனிதராகலாம்!

கி.பி. 1ஆம் நூற்றாண்£டு
சுங்கப்பேரரசு தொடங்கி
இன்றுவரை
2000 ஆண்டுகளாக
பார்ப்பனியம்
பகுத்தறிவாளர்களை
படுகொலை செய்துவருகிறது.
ஆனாலும்,
புதிது புதிதாய்   
புறப்படும் பகுத்தறிவாளர்கள்
பார்ப்பனியத்தின் வேரில்
வெந்நீரை ஊற்றிக்
கொண்டே இருப்பர்!

ஆணாதிக்கத்திற்கு எதிராய்
பெண்ணிடமிருந்து
என்னென்ன உணர்வுகள்
கிளர்ந்தெழுகின்றனவோ
அவைதான் பெண்ணியம்!

தந்தை பெரியாரின்
பெண்ணியம் என்பது
சமூக சமத்துவத்திற்கான
ஒரு கருவி!
கர்ப்பப்பை, வாரிசு, சொத்துரிமை
இவைதான் பெண்களை
அடிமைப்படுத்துகிறது.

தொகுப்பு: உடுமலை வடிவேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *