முட்டையை குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது!

ஜூன் 01-15

 

முட்டையை வாங்கியவுடன் அதனை குளிர்பதனப் பெட்டியில் வைக்கிறோம். இப்படிச் செய்வதன் மூலம் அதிலிருக்கும் சத்துக்கள் அழிந்து போவதோடு உடலுக்கும் கேட்டை உருவாக்கும்.

வாங்கிய ஒன்றிரண்டு நாள்கள் மட்டுமே முட்டை நன்றாக இருக்கும். அதற்கு அறை வெப்பநிலையில் அதனை வைத்திருப்பதே காரணம். ஆனால், பல நாட்கள் வரை கெடாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் அதனை குளிர்பதனப் பெட்டியில் வைத்து விடுகிறோம்.

குளிர்பதனப் பெட்டியில் முட்டையை வைத்தால் பாலைப் போல் திரிந்து கெட்டியாகிவிடும் வாய்ப்பு உண்டு. அதைப் பயன்படுத்தவும் முடியாது.

மேலும், குளிர்பதனப் பெட்டியில் வைத்துவிட்டு வெளியே எடுக்கும்போது முட்டை அறை வெப்ப நிலைக்குத் திரும்பும். அப்போது முட்டை  ஓட்டின் மேற்பரப்பில் வியர்க்கும். பார்க்கும் போதே நீர்த்துளிகள் இருப்பது தெரியும். முட்டையின் நுண்ணிய துளைகளின் வழியே பாக்டீரியாக்கள் உள்ளே போய்விடும்.

பொதுவாக அதிக வெப்பம் அல்லது அதிக குளிரைத் தாங்கும் பாக்டீரியாக்கள் உண்டு. அந்த வகையில் சால்மோனெல்லா டைஃபி என்கிற பாக்டீரியாதான் மனிதர்களிடம் டைபாய்ட் காய்ச்சலை உருவாக்குபவை. முட்டையில் இந்த வகை பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும் என்பதால், அவை எளிதில் அழியாது. செயலிழக்காது. குறிப்பாக, குளிர்பதனப் பெட்டியில் வைத்திருக்கும்போது தூங்கும்(!) பாக்டீரியாக்கள் அறை வெப்ப நிலைக்குத் திரும்பும்போது பழைய நிலைக்கு வரும்.

சூடுபடுத்தும்போது பாக்டீரியா அழிந்துவிடும் என்றாலும் அரைவேக்காடு ஆபத்தானது.

முட்டைதான் என்றில்லை. எந்த வகையான உணவுப் பொருளையும் குளிர்பதனப் பெட்டியில் வைத்துவிட்டு அப்படியே எடுத்து பயன்படுத்தக் கூடாது. அறை வெப்ப நிலைக்கு கொண்டு வருவது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *