புதுப்பா

ஜுன் 01-15

ஓராயிரம் சூரியனின்
வெப்பம் தெறிக்கும்,
உன் வார்த்தைகள்!
எதிரிகளை வதம் செய்கையில் உன் (எழுத்து) நடையின்
அதிர்வில்
நடுங்குகிறது ஆரியம்! உன் சிந்தனையின்
பெரு வெடிப்பில்
சின்னா பின்னமாகிறது
ஜாதியக் கோட்டைகள்!
உன் கைத்தடியில்
அடி பட்டு
நொறுங்கிக் கிடக்கிறது
மத வெறி! தன்மானம் இழந்தேனும்
இனமானம் காத்தவரே,
கனமான கொள்கைகளை
கிழத் தோளில் சுமந்தவரே, எத்தனை விமர்சனம்
இன்றும் உன் மீது,
எவர் சொன்னது ?
நீ இறந்து விட்டாயென்று ….

–  பாசு.ஓவியச் செல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *