கைமேல் பலன்?

மே 16-31 - 2014

 

காசிக்குச் சென்று
கங்கையில் நீராடி
கங்கை நீர் கொண்டு
ராமநாதருக்கு
அபிஷேகம் செய்ய
ராமேஸ்வரம் சென்றவர்
குடும்பத்தோடு மாண்டார்
சாலை விபத்தில்!

தெய்வத்தின் திருவருள்
முன்னோர்களின் நல்லாசி
உடனே கிட்டியது
கைமேல் பலன் என்பது
இதுதானோ?

_நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *