Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சென்னையில் பல இடங்களில் தெருவிலும், சாலை ஓரங்களிலும் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதை இன்றும் பார்க்கலாம். ஏன் அவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை? எதிர்காலத்தில் திருட்டுகள், பிக் பாக்கெட், செயின் பறிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடும் வாய்ப்பு இந்தச் சிறுவர்களுக்கு அதிகம் உள்ளது.

– எஸ். ராஜேஸ்வரன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

மக்களை இழுத்தடிப்பதை அரசு அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். மக்கள்தான் ஜனநாயகத்தின் நாயகர்கள். அதிகாரிகள் எல்லோரும் அவர்களுக்கு ஊழியர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அரசு என்பது மக்களுக்காகத் தானே தவிர அவர்களுக்கு எதிராக இருக்கக்கூடாது.

– கே.கே.சசீதரன்,
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

இலங்கை தங்கள் நாட்டு சட்டதிட்டங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அவ்வாறு நடந்துகொள்ளும் என்றும் நம்புகிறோம். மேலும், போருக்குப் பிறகு நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளையும் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும். இந்த நடவடிக்கைகளில் முன்னேற்றம் இல்லாவிட்டால் சர்வதேச சமூகம் இனியும் பொறுமையாக இருக்காது.

– நிஷா பிஸ்வால், அமெரிக்க வெளியுறவுத் துணை அமைச்சர்