உடல் உறுப்புதானம் தமிழ்நாட்டிற்குப் பெருமை!

அக்டோபர் 01-15

உடல் உறுப்பு தானத்தால் கடந்த 5 ஆண்டுகளில் 2,076 பேர் பயனடைந்துள்ளனர்.

சாலை விபத்துகளில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 83 சதவீதம் பேரும், தீவிர நோயினால் மூளைச்சாவு அடைந்த 17 சதவீதம் பேரும் உடல் உறுப்பு தானம் செய்கின்றனர். இவர்களில் 64 சதவீதம் பேர் 21 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள்.

சாலை விபத்துகளில் சிக்கி மூளைச்சாவு அடையும் 80 சதவீதம் பேர் ஆண்களாகவே உள்ளனர். 10 லட்சம் பேரில் 1.1 சதவீதம் பேர் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ஒத்துக்கொள்கின்றனர்.

தமிழகத்தில் 34 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2008 முதல் இதுவரை 689 சிறுநீரகம், 339 கல்லீரல், 58 இதயம், 24 நுரையீரல் என 1,110 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. 578 கண்கள், 380 இதய வால்வுகள், 1 தோல் தானமாகப் பெற்று 969 திசுக்கள் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 800 பேர் சிறுநீரகத்துக்காகவும், 80 பேர் கல்லீரலுக்காகவும் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *