இந்தியாவில் 6.80 கோடி மக்கள் குடிசைகளில் வசிப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கூறுகிறது. 10 லட்சத்திற்கும் மேல் மக்கள்தொகை கொண்ட 19 நகரங்களில் வசிப்பவர்களில் 25 சதவிகித மக்கள் குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர். மகாராஷ்டிரா, உ.பி. மற்றும் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில்தான் அதிக மக்கள் குடிசைகளில் வசிக்கின்றனர்.
இதில், 90 சதவிகித குடிசை மக்களின் வீட்டில் மின்சார வசதி உள்ளது. 8.2 சதவிகிதத்தினர் மண்ண்ணெய் விளக்கு பயன்படுத்துகின்றனர். விளக்கு வசதி இன்றி 0.5 சதவிகிதத்தினர் உள்ளனர்.
74 சதவிகித குடிசை மக்கள் குழாய்களுடன் கூடிய குடிநீர் வசதியையும் 20.3 சதவிகிதத்தினர் கைப்பம்புகளுடன் கூடிய தண்ணீர் வசதியையும் பெற்றுள்ளனர்.
66 சதவிகித குடிசைகளில் கழிப்பறை வசதி உள்ளது. 18.9 சதவிகித மக்கள் திறந்த வெளியை கழிப்பிடங்களாகவும் 15.1 சதவிகிதத்தினர் பொதுக் கழிப்பிடங்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.
முற்றிலும் குடிசைப் பகுதியாக மேகாம், பெர்வா, ஹாஜன், குய்மோ மற்றும் ஃபிரிசல் ஆகிய 5 நகரங்கள் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ளன. உ.பி.யில் 3 ஊர்களும், மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தலா ஓர் ஊரும் முழு குடிசைப் பகுதிகளாக உள்ளன.