மடல் ஓசை

ஏப்ரல்-01-15

ஆசிரியருக்கு வணக்கம்.

மக்களுக்காக _ அதுவும் மக்களால் புறந்தள்ளப்படும் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் உண்மையான இதழ் உண்மை. பெரியார் வழி கருத்துகள், மூடநம்பிக்கை ஒழிப்பு, உயர்ஜாதிக்காரனின் ஆதிக்கம் போன்றவற்றை உண்மை தட்டிக் கேட்பது சக மனிதனுக்கும், மக்களுக்கும் ஆறுதல் அளிக்கும் நிகழ்வு.

கவிதைகளில் படைப்பாளிகளின் கவிதைத்தனத்தைக் காட்டாமல், சமூகத்தின் மீதான அக்கறையை மிகவும் உன்னிப்பாய் படைப்பாளிகளின் வரிகளில் கொண்டு வருவது உண்மையின் உண்மை.

மதுமதி, ஓவியச்செல்வன், ஆசிரியர் பதில்கள் போன்ற பகுதிகள் படைப்பாளனுக்கும், வாசகனுக்கும் பெரிய எதிர்பார்ப்பையும், ஏதோ ஒரு தூண்டுதலையும் தருகிறது. உண்மை உண்மைக்குக் களம் தரும்.

– தாய்சுரேஷ் கடத்தூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *