தமிழ் இணையக் கல்விக் கழகம்

2024 பெட்டி செய்திகள் ஜுன் 1-15 2024

தமிழ் இணையக் கல்விக்கழகம் (முந்தைய பெயர் : தமிழ் இணையப் பல்கலைக்கழகம்) உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களின் மரபுகளையும் பண்பாட்டையும் காக்கவும் அவர்களது இலக்கியத் தொடர்பினை நீட்டிக்கவும் 17 பிப்ரவரி 2001ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் டாக்டர் கலைஞரால் நிறுவப்பட்டது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழாவில் இதற்கான அறிவிப்பினை அப்பொழுதைய தமிழ் நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அறிவிப்பின் செயல் வடிவம்.

இந்தியாவில் இணையவழியே கல்வி வளங்களையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்துவதுடன்உலகளாவிய கல்விக்காக நிறுவப்பட்ட முதல் மற்றும் இணையில்லா அமைப்பாக இது விளங்குகிறது. தமிழ் இணையப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு, ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது.

இதன் தனிச்சிறப்பு – உலகத் தரத்தில் அமைந்துள்ள இதன் மின் நூலகம்.

இந்த மின் நூலகம் அரிய நூல்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நூல்கள், ஆய்விதழ்கள், பருவ இதழ்கள், சுவடிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.