பளீர்

ஜூன் 16-30

பத்ரகாளியின் முன்னாள் இன்னொரு தேவநாதன்?

பத்ரகாளி கோயிலுக்குப் போய் முறையிட்டால் பணம் மட்டுமல்ல, கேட்டவை அனைத்தும் கிடைக்கும் என்று வாணவேடிக்கைகள் தயாரிப்பில் பெயர்பெற்ற ஊரில் வசிக்கும் பெரியோர்கள் தம் இனத்தோருக்கு_ தம்மைச் சார்ந்த மக்களுக்கு அறிவுரை கூறி கோயிலுக்கு அனுப்பி வைப்பர்.  அந்த அளவுக்கு கோயிலில் இருக்கும் அம்மன் மீது அசையாத நம்பிக்கை கொண்டிருந்தனர்.

ஆனால், கோயிலுள் அண்மையில் நடைபெற்ற ஒரு தவறான செயலால் மனப் புழுக்கத்தில் உள்ளனர் அப்பெரியோர்கள். கோயிலில் பூசை செய்பவர் என்பதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனராம்.  வேதம் ஓதும் வாயால் சபித்துவிடக் கூடும் என்பதும் கோயிலினுள் நடந்த தவறு வெளியில் தெரிந்தால், அம்மன் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டு, பக்தர்கள் முன்புபோல் திரண்டு கோயிலுக்கு வருவார்களா என்பதும் தோன்றவே இந்தச் சம்பவத்தை அப்படியே மறைத்துள்ளார்கள்.

கோயிலினுள் இருக்கும் அஷ்டலட்சுமியை வழிபடுவதில் அதீத ஆர்வம் காட்டும் பெண்கள் காணிக்கைகளை நிறைய வைப்பதோடு, சாமி, குங்குமத்தை நீங்களே வைத்துவிடுங்கள் என்று 63 வயது சீதாராமனிடம் சொல்வார்களாம்.  பெண்களின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தவருக்கு ஒரு சிறுமியிடம் விபரீத ஆசை வர, சிறுமி போட்ட சத்தத்தில் கோயிலில் இருந்தவர்கள் ஓடிவந்து அர்ச்சகரை அடித்திருக்கிறார்கள்.

சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் தெரிவிக்க, அர்ச்சகரை காவல்துறைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.  ஒன்றும் இல்லாத விஷயத்தை ஏன் பெரிதுபடுத்தணும், 63 வயதில் அம்மனுக்குப் பணிவிடை செய்பவர் தப்புச் செய்வாரா?  கீழே விழுந்த குழந்தையைத் தூக்கிவிட முயன்றபோது தெரியாம மேல விழுந்திட்டாரு.  அப்படியே அவர் தவறான எண்ணத்தில் விழுந்திருந்தால் பத்ரகாளி தண்டிப்பாள் என்று பெற்றோரைச் சமாதானப் படுத்தியிருக்கிறது கோயில் நிருவாகம்.

ஆறுதலடையாத பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றபோது, இந்தக் குழந்தை கோர்ட் கேசுனு அலைந்து அவமானப்பட வேண்டியிருக்கும் என்று விளக்கியுள்ளனர்.  உடனே, சாமி கும்பிட்டபோது வீண் விவாதம் செய்து தகராறு செய்ததாக புகார் கொடுத்திருக்கிறார்கள்.

மேலும், அந்தக் கோயிலில், அம்மனுக்குப் பணிவிடை செய்பவர்கள் பான்பராக் போன்ற போதைப் பொருள்களைப் போடுவதோடு இரவானால் குடி மகன்களாகவும் ஆகிவிடுவார்களாம்.   தீர்த்தம் கொடுக்கும் போது இளம்பெண்களின் உதடுகள் ஈரமாவதைப் பார்த்து தான் உணர்ச்சிவசப்பட்டு, தன்னைக் கட்டுப்படுத்தி இந்தத் தொழிலைச் செய்வதாக அவர்களுக்குள், பேசிக் கொண்டதாக உள்ளூர்க்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 


 

நல்லார் சொன்னாரு சி.பி.அய்.யின் விருப்பம்

சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் சட்டம் அ-னுமதிக்கப்படும் வரையிலும் நீதிபதிகள் அவரைச் சிறைக்கு அனுப்புவார்கள்.  ஆனால், அந்த முடிவை எடுக்கும்வரை அவர் அப்பாவிதான்.  இந்த கால இடைவெளியில் நீதிமன்றக் காவல் என்பது குறைந்தபட்சமாகத்தான் இருக்க வேண்டும்.  ஆனால், சி.பி.அய் கணக்கற்ற நாட்களுக்கு நீதிமன்றக் காவலைக் கேட்கிறது.  பெற்றும் விடுகிறது.  இது அநீதி.

இந்தியா அரசியல் சாசனப்படிதான் வாழ்கிறது.  இது வாழ்க்கைக்கும் சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் தருகிறது.  ஜாமீன் என்பது தற்காலிகமாக அதிகாரத்தைச் (நல்ல வேளையாக ஜனநாயகத்தில் அதிகாரம் தற்காலிகமானதாகத்தான் இருக்க முடியும்)  சுழற்றுபவர்கள் தரும் பரிசு அல்ல. ஜாமீன் என்பது உரிமை.  இல்லையென்றால் போலீஸ் ராஜ்யத்தின் மிக அருகில் நாம் வாழ்ந்து கொண்டிருப்போம்.  அங்கே அதிகாரவர்க்கம் மனம் போனபடி எந்தவொரு குடிமகனையும் சிறையில் தள்ள முடியும்.  இது முன்பு அவசரநிலை காலத்தின்போது நடந்தது.  அந்தக் காலகட்டம் மீண்டும் வராது என்று நினைத்தோம்.

2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்கள் விசாரணை முடிந்தும்கூட கால வரையற்று ஜெயிலில் அடைக்கப்பட வேண்டும் என்று சி.பி.அய் விரும்புகிறது.
முன்னணிப் பத்திரிகையாளர் எம்.ஜே.அக்பர்

நன்றி: இந்தியா டுடே ஜூன் 8, 2011


 

பிளாஸ்டிக்கிற்குப் பதில் காகிதத்தைப் பயன்படுத்துவது சரியா?

பிளாஸ்டிக்கும், காகிதமும் இயற்கை வளத்தை அழித்து சுற்றுச் சூழலைக் கெடுக்கின்றன.  உலகம் முழுவதும் கழிவாக்கப்படும் 400 கோடி பிளாஸ்டிக் பைகளைத் தொடர்ச்சியாகக் கோர்த்தால் 63 முறை பூமியைச் சுற்றலாம் என்கின்றனர்.  மரங்களை அழித்துத்தான் காகிதம் தயாரிக்கப்படுகிறது.  பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும்போது பாலிஎதிலின் துணைப்பொருளாகக் கிடைக்கிறது.  பிளாஸ்டிக் பையைத் தயாரிக்க ஆகும் எரிபொருளைவிட 4 மடங்கு அதிக எரிபொருள் காகிதப் பையை உருவாக்கத் தேவைப்படுகிறது.

காகிதப் பையினைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எரிபொருள்களால் அமில மழை, காற்று, நீரில் மாசு ஏற்படலாம்.  பிளாஸ்டிக் தயாரிக்கப் பயன்படும் 6 பொருள்களில் அய்ந்து பொருள்கள் நச்சுத்தன்மை கொண்டவை.  மேலும், பிளாஸ்டிக் பைகளைச் சாப்பிட்டு காட்டில், கடலில் வாழும் உயிரினங்கள் பல அழிந்து வருகின்றன. புற்றுநோய்க்குப் பல காரணங்கள் இருப்பினும் பிளாஸ்டிக்குக்கும் புற்று நோயை உண்டாக்குவதில் பெரும்பங்கு உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.  மைக்ரோவேவ் ஓவன், குளிர்சாதனப் பெட்டிகளில் (திக்ஷீவீபீரீமீ) பிளாஸ்டிக் டப்பாக்களில் வைத்து உணவுப் பொருள்களை, தண்ணீரை வைக்கக்-கூடாது என்றும் மைக்ரோவேவ் ஓவனுக்குள் உணவுப் பண்டத்தை வைத்து அதன் மீது பிளாஸ்டிக் தாளைச் சுற்றக் கூடாது என்றும் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள சுற்றறிக்கைகள் கூறுகின்றன.

பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து ஃபிரீசரில் வைக்கும் போது டையாக்சின் என்னும் பொருள் உள்ளே கலந்து விடுகிறது.  மைக்ரோவேவ் ஓவனில் வைத்துச் சூடேற்றும்போது டையாக்சின் கலந்து உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கிறது.  எனவே, கண்ணாடி, மங்கு பாத்திரங்களைப் பயன்படுத்தலாம் என்று கேஸ்டில் மருத்துவமனை மருத்துவர் எட்வர்ட் ஃபியூஜிமாட் கூறியுள்ளார்.

காகிதம் மக்கிவிடும் தன்மையுடையது என்றாலும், இன்றைய குப்பை கொட்டும் முறையில் போதிய தண்ணீர், ஒளி, ஆக்சிஜன் கிடைக்காததால் மக்கும் தன்மையை இழந்துவிடுகிறது.  பிளாஸ்டிக் எப்போதும் மக்காத தன்மை உடையது. எனவே இனி, காகிதப் பைகளை உபயோகிப்பீர், பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பீர் என்ற வாசகங்களுக்குப் பதில், இனி பிளாஸ்டிக், காகிதப் பைகளைத் தவிர்ப்பீர்! துணிப் பைகளை உபயோகிப்பீர் எனக் கூறலாம்.

இது ஒரு புறம் இருக்க,காகிதம் தயாரிக்க முக்கிய மூலப்பொருள் மரம்.பிளாஸ்டிக்கிற்குப் பதில் காகிதத்தைப் பயன்படுத்தத் தொடங்கினால்,அதனைத் தயாரிக்க மரங்களை அழிக்கவேண்டிவரும்.மரங்களை அழித்தால் மேலும் மேலும் சுற்றுச் சூழலுக்குக் கேடு நேரும்.எனவே,காகிதப் பயன்பாட்டைக் குறைப்பதுதான் வரும் காலத்தில் முக்கியப் பிரச்சினையாக இருக்கப்போகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *