09.08.2015 அன்று தந்தி தொலைக்காட்சி கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் நடிகையும் அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான திருமதி குஷ்பூ சுந்தர் பேசும்போது அவர்களிடம் நெறியாளர் ரங்கராஜ் பாண்டே கேட்ட கேள்வி: வடக்கில் இருந்து வந்த நீங்கள் தமிழகத்தில் அரசியலில் இறங்கும்போது ஏன் தி.மு.க.வில் இணைந்தீர்கள்?
திருமதி குஷ்பூ: நான் மதசாற்பற்றவள், என்னுடைய கொள்கைகளுக்கு ஒத்துப்போகும் கட்சியாக திராவிட முன்னேற்ற கழகத்தைப் பார்த்தேன்.
காரணம் நான் பெரியார் பாலோயர், நான் பெரியாரிஸ்ட். எனவே அதில் சேர்ந்தேன். மேலும், எளிதில் சந்திக்கும் தலைமையைக் கொண்ட இயக்கமாகவும், என்னுடைய திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் கட்சியாகவும் தி.மு.க. இருந்தது,
(இந்த பதிலை சொல்லியதும் ரங்கராஜ் பாண்டே முகத்தில் ஒரு குத்து விழுத்தது போல இருந்தது)
மேலும் பி.ஜே.பி.யில் சேரப்போவதாக செய்தி உலவிய நேரத்தில் ஏன் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தீர்கள்? என்று பாண்டே கேட்டார்.
உடன் சற்றும் தாமதிக்காமல் பதில் சொன்னார் குஷ்பூ,
பி.ஜே.பி. ஒரு மதம் மட்டுமே இருக்க வேண்டும் என்று சொல்கிற கட்சி, அதுவும் இந்து மதம் மட்டுமே இருக்க வேண்டும் என்று சொல்கிற கட்சி, எனக்கு அது ஒத்து வராது, என்னுடைய கொள்கைகளுக்கு உடன்படாத கட்சியில் நான் எப்படி சேரமுடியும்.
இவ்வாறு பேசினார்.
தகவல்: தி.என்னாரெசு பிராட்லா, காரைக்குடி
Leave a Reply