பானகல் அரசர்

2024 கவிதைகள் ஜுலை1-15-2024

பன்னரும் புகழ்மிகு பானகல் அரசர்
முன்னர் திராவிடர் கழகம் சேர்ந்து
பின்னர் நீதிக் கட்சியில் இணைந்தார்!
சென்னை மாநில இரண்டாம் முதல்வராய்
ஆட்சியும் புரிந்தார்! நீதிக் கட்சிஉள்
ளாட்சித் துறையில் அமைச்சரும் இவரே!
பறையர் தலித்தென அழைத்தல் வேண்டா!
நிறைவாய் ஆதி திராவிடர் என்னும்
பெயரினைச் சட்டம் ஆக்கினார்! மகளிர்
நயத்தகு வாக்கு உரிமை வழங்கினார்!
இன்புற இந்திய மருத்துவக் கல்லூரி
சென்னை நகரில் தொடங்கினார்; மருத்துவக்
கல்வித் தகுதியில் சமற்கிரு தத்தை
வல்லவர் நீக்கியே சட்டம் இயற்றினார்!
பானகல் அரசரின் பன்னரும் சாதனை
மனத்தில் என்றும் மலரென மணக்குமே!