முகநூல் பேசுகிறது

ஆகஸ்ட் 01-15

என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கௌம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்க முடியாது… சங்கு ஊதிவிட்டுதான் கௌம்பனும்..
சூர்யா பார்ன் டு வின் ஜூலை 23, 2012 மாலை 4:03 மணி

லிமிசி அதிகாரிகள் இந்தியில் கையெழுத்து போடனும்னு அறிவிக்கிறதால வரும் ஆபத்தை விடவா இந்திய இறையாண்மைக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து வந்துவிடப் போகிறது?
– டான் அசோக் ஜூலை 23, 2012 இரவு 8:41 மணி

கோவில் சிலைகளுக்கு பாலாபிஷேகம் பண்ணறத ஏற்கிற பெரும்பான்மையான “அறிவு” ஜீவிகள், நடிகர்களின் ரசிகர்கள் கட் அவுட்ல் பால் ஊற்றுவதை அறிவின்மை எனக் கூறுவதே ஆன்மிக அறிவுடைமை. _- ரகுநாத் ரத்னம் ஜூலை 14, 2012 மதியம் 1:05 மணி

இரவில் வெளியில் செல்லாதே என உங்கள் மகளுக்குச் சொல்லாதீர்கள். அதற்குப் பதில் உங்கள் மகன்களுக்கு பாடம் நடத்துங்கள்.

-பகிர்ந்தவர்: பண்பொளி கண்ணப்பன், ஜூலை 17, 2012 இரவு 11:36 மணி


இந்திய மக்களே, இந்திய அரசே !

மொழித் தீண்டாமையை அறவே ஒழிப்போம்! தாய் மொழி உரிமைகளை காப்போம் ! மொழி சமரசத்தை போற்றி பாதுகாப்போம் !

ஹிந்தி அல்லாத பிற மொழிகளையும், பிற மொழியினத்தவரையும் மதிப்போம் !
இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் சமமாக நடத்துவோம் ! ‘ஹிந்தி மட்டுமே’ என்றே மாயக் கோட்பாட்டை உடைப்போம் !

இதை அனைவருக்கும் பரப்புங்கள்.

_- ராஜ்குமார் பழனிச்சாமி ஜூலை 14, 2012 இரவு 7:22 மணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *