தமிழீழ கால்பந்து அணி

ஜூன் 16-30

பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் (ஃபீஃபா) அங்கீகாரம் பெறாத நாடுகளுக்கான 5வது 2012 வீவா கால்பந்து உலகக்கோப்பை போட்டி ஈராக் குர்திஸ்தானில் நடைபெறுகிறது. இப்போட்டிகளில் ஒன்பது நாடுகள் சூன் 4 முதல் சூன் 9 வரை நெல்சன் மண்டேலா வெற்றிக் கிண்ணத்திற்காக விளையாடவிருக்கின்றன. புலம்பெயர் தமிழர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள தமிழீழ கால்பந்து அணி இம்முறை முதன் முறையாக இப்போட்டிகளில் பங்கேற்கிறது. முழுக்க தமிழர்கள் மட்டுமே கொண்ட முதல் பன் னாட்டு விளையாட்டு அணி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிப் படியில் ஏறட் டும் தமிழீழ கால்பந்து அணி என உலகத் தமிழர்கள் வாழ்த்து களைக் குவித்து வருகின்றனர். ஆனால்  பிஃபா அங்கீகாரம் இல்லா விட்டாலும் புதிய கூட்ட மைப்பு வாரியத்தில் (Nouvelle Fédération-Board, NFB) உறுப்புரிமை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *