நிகழ்ந்தவை

மே 16-31
  • முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்த நீதிபதி ஆனந்த் குழுவின் அறிக்கை ஏப்.25ல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

  • முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரிசாட்-_1 செயற்கைக் கோள் _பி.எஸ்.எல். வி_சி 19 ராக்கெட் மூலம் ஏப்.26ல் சிறீஅரிக்கோட்டா விலிருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக இயங்கத் தொடங்கியது. வானில் மேகக்கூட்டம் இருந்தாலும் துல்லியமாகப் படமெடுக்கும் புதிய வசதி இந்த செயற்கைகோளில் உள்ளது.
  • பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரம் பேருக்கு 5 மாத ஊதியம் அளிக்க தமிழக அரசு ஏப்.26ல் உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்தது.

  • ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட பிஜு ஜனதாதள எம்.எல்.ஏ. ஜினா ஹிகா ஏப்.26ல் விடுவிக்கப்பட்டார்.
  • கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து தமிழகத்திற்கு 900 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும் என்று ஏப்.27ல் மத்திய அரசு மக்களவையில் அறிவித்தது. பன்னாட்டு குற்றவியல் நீதிமன்ற நிதிபதி தேர்தலில் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரி ஏப்.27ல் வெற்றிபெற்றுள்ளார்.

  • பா.ஜ.க. முன்னாள் தலைவர் பங்காரு லெட்சுமணன் லஞ்ச வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டு ஏப் 28ல் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • ஆரணி கயிலாசநாதர் கோவில் தேர் மே 1 அன்று அச்சு முறிந்து விழுந்ததில் 5 பக்தர்கள் உயிரிழந்தனர்.
  • மதுரை ஆதினம் 293ஆவது பட்டத்திற்கு குற்றப்பின்னணி உடைய நித்யானந்தாவை அறிவித்ததை 10 நாட்களில் மதுரை ஆதீனகர்த்தர் திரும்பப் பெற வேண்டும் என மே 1ல் மயிலாடுதுறையில் கூடிய சைவ மடாதிபதிகளின் கூட்டத்தில் கோரப்பட்டது. இல்லையேல் வழக்குத் தொடர முடிவெடுக்கப்பட்டது.
  • ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை அளிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை ரத்து செய்யக் கோரும் வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி மே 1ல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

  • சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகளால் ஏப்ரல் 21 ல் கடத்தப்பட்ட சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் மே 3 அன்று விடுவிக்கப்பட்டார்.
  • தேர்தல்  ஆணையத்தின் மூலம் எந்தக் கட்சிக்கும் நியாயம் கிடைக்காது என்பதால் ஜூன் 13ல் நடக்கவுள்ள புதுக்கோட்டை இடைத்தேர்தலை தி.மு.க.புறக்கணிக்கும் என்று மே 3 ல் தி.மு.க.தலைவர் கலைஞர் அறிவித்தார்.
  • நேபாளப் பிரதமர் பாபுராம் பட்டாராய் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கிய தேசிய அரசு மே 5ல் பொறுப்பேற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *