வலைவீச்சு : முகநூல் பேசுகிறது

பிப்ரவரி 01-15

மனைவியுடன் பிறந்த அண்ணன் +தம்பி மனைவிகளுக்கு மஞ்சள் ஆரஞ்சு வண்ண புடவைகளை அன்பளிப்பாய் தந்தால்……(!?) குடும்பத்தில் அமைதி தழைத்தோங்கும் …செய்தி ! ……ஏண்டா !

இருந்த குடும்ப அமைதியும் அதுக்கு அப்புறம் தாண்டா சுத்தமா போய்டும் ! அண்ணிகளுக்கும்.. நாத்தனார்களுக்கும்… அடுத்த மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பமாகிவிடாதா? திருந்துங்கடா

பெரியார் தடி ஜனவரி 20, 2012 இரவு 10:35 மணி

சாகர சங்கமம் (சலங்கை ஒலி), சிந்து பைரவி, ருத்ர வீணா(உன்னால் முடியும் தம்பி), பழசிராஜா – இளையராஜாவுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படங்கள். இவற்றில் உள்ள பொதுத்தன்மை யோசிக்க வைக்கிறது. இசைஞானி எத்தனையோ படங்களில் நம்ம இசையைத் தந்திருக்கிறார். அதுக்கெல்லாம் விருது கொடுக்க மாட்டாங்களோ? கவின் மலர்

 

புதுசா வீடு கட்டி, அந்த வீட்டுக்குப் போறத்துக்கு நம்ம ஆளுக அழைப்பு விடுப்பார்கள்… அது எப்படி இருக்கும் என்றால், ‘கிரகபிரவேஷம்’ வந்துருங்க என்று அழைப்பார்கள்…. அது என்ன ‘கிரகபிரவேஷம்’ ? சந்திர மண்டலத்துலையா வீடு கட்டி வச்சு இருக்க? ஜாதி, மதம், கடவுள் என்று பிரிந்து கிடக்கும் தமிழனே…. ஆரியப் பார்ப்பானின் பண்பாட்டுப் படையெடுப்பை என்று உணர்வாய் நீ? – பரணிதரன் கலியபெருமாள்

புரோகிதர்: “ஹோமியத்தைத் தொட்டு வாயில விட்டுண்டு மூணூ தடவ கன்னத்துல போட்டுக்கொங்கோ” – தமிழன்: “சரி சாமி!”

சக-தமிழன்: “டேய் அது மூத்திரம் டா! அதைப் போயி குடிக்கிறியேடா!!” தமிழன்: “நீ யாருடா சொல்றது டாய்…. பல வருசமா இதான் டா குடிக்கிறோம்!” (தமிழ்ப் புத்தாண்டு விசயத்திலும் இதே!!) டான் அசோக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *