திருக்குறள் துளிகள்

ஜனவரி 16-31

திருக்குறள் பெரும்பிரிவு பால் எனவும், சிறுபிரிவு இயல் எனவும் அதற்கும் சிறுபிரிவு அதிகாரம் எனவும் பெயர் பெற்றுள்ளது.

திருக்குறள்  அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பால்களை உடையது.

அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன.

திருக்குறள் தமிழ்ச் செய்யுள்களில் முதல் பாவாகிய வெண்பாவில் முதல் வகையாகிய குறட்பாக்களால் ஆனது.

திருக்குறளில் அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களாக் 1330 குறட்பாக்கள் உள்ளன.

திருக்குறளில் முப்பால்களிலும் 120-க்கும் மேற்பட்ட உவமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

திருக்குறளில் அனிச்ச மலர் 4 முறையும், யானை 8 முறையும், பாம்பு 3 முறையும் சுட்டப்பட்டுள்ளன.

திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள் : குறிப்பறிதல – (பொருட்பால் – அதிகாரம் 71) குறிப்பறிதல் – (காமத்துப்பால் – அதிகாரம் 110)

‘”தொடிற்கடின் அல்லது காமநோய் போல விடிற்கடின் ஆற்றுமோ தீ” (1159) என்ற குறள் ஒரே எழுத்தில் முடிந்துள்ளது.


என்ற இந்தக் கொம்பு எழுத்துக்கள் இல்லாமல் 17 குறள்கள் உள்ளன.

46 குறள்களில் உயிரினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, அருளுடைமை, அறிவுடைமை, ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை, பண்புடைமை, நாணுடைமை என வள்ளுவர் கூறிய உடைமைகள் 10.

“ஒருமையுள் ஆமைபோ லைந்தடக்க லாற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து” – என்ற குறளில் 1.5.7 என்ற பகா எண்கள் குறிபிடப்பட்டுள்ளன.

அன்னம்,கூகை (ஆந்தை), கொக்கு, காக்கை, புள்(பறவை), மயில், ஆமை, கயல் மீன். மீன் (விண்மீன்), முதலை, நத்தம்(சங்கு), பாம்பு, நாகம், என்பிழாது(புழு) ஆகியன இடம் பெற்றுள்ளன.

பலோடு தேன்கலந் த்ற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர் (112) – என்ற குறளில் பால், தேன், நீர் என்ற மூன்று நீமங்கள் இடம் பெற்றுள்ளன.

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு” – என்ற குறளில் ஒரே சொல் 6முறை இடம் பெற்றுள்ளது.

ஒரே சொல் 5 முறை 5 குறட்பாக்களிலும், ஒரே 4முறை 22 குறட்பாக்களிலும், ஒறே சொல் 3 முறை 27 குறட்பாக்களிலும் இடம் பெற்றுள்ளன.

“துணை எழுத்தே இல்லாத குறள்
“கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”. (391

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”
என்ற குறளில் ஒரே சொல் 6 முறை இடம் பெற்றுள்ளது.

ஒரே சொல் 5 முறை 5 குறட்பாக்களிலும், ஒரே சொல் 4 முறை 22 குறட்பாக்களிலும், ஒரே சொல் 3 முறை 27 குறட்பாக்களிலும் இடம் பெற்றுள்ளன.

திருக்குறளில் தமிழ் என்ற சொல் இடம் பெறவில்லை.

முதன் முதலில் 1812 ஆம் ஆண்டு ஓலைச்சுவடியிலிருந்து அச்சிடப்பட்டதே திருக்குறளின் முதற்பதிப்பாகும்.

திருக்குறளில் ஒரு முறை மட்டுமே இடம் பெற்றுள்ள எழுத்துகள் ‘”வீ, ங”.

1330 குறட்பாக்களில் எந்த இடத்திலும் கடவுள் என்ற சொல் இடம் பெறவில்லை.

திருக்குறளில் 50 பிறமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *