உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு

பிப்ரவர் 16-28

சீனாவில் 1,854 அடி உயரத்தில் கட்டமைக்கப்பட்ட உலகின் மிக உயரமான பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விடப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள யுனான் மற்றும் குய்சோகு ஆகிய இரண்டு மாகாணங்களை இணைக்கும் வகையில் இந்தப் பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு மலைகளுக்கும் நடுவே ஓடும் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பெய்பான்ஜியாங் பாலத்தின் உயரம் 565 மீட்டர் (1,854 அடி) ஆகும். இது உலகிலேயே மிக உயரமான பாலமாகும். இந்தப் பாலம் கட்டமைக்கப்-பட்டதையடுத்து, யுனானில் உள்ள ஜுவான்வெய் நகரத்துக்கும் குய்சோகில் உள்ள ஷுயிசெங் நகரத்துக்கும் இடையிலான பயண நேரம் நான்கு மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரமாக குறையும். இதனால், சரக்குப் போக்குவரத்து மேம்படும். இரு மாகாண மக்களும் இருநகரங்களுக்கிடையில் சென்று வருவது எளிதாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹுபே மாகாணத்தில் ஸீடு ஆற்றின் குறுக்கே சீன அரசு சுமார் ரூ.1,000 கோடி செலவில் சுமார் 4,400 அடி உயரத்தில் பாலத்தைக் கட்டமைத்து வருகிறது. இது பயன்பாட்டுக்கு வரும் நிலையில், உலகின் மிக உயரமான பாலம் என்ற பெருமையைப் பெரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *