விவாகரத்து வேண்டுகின்ற கிறிஸ்தவர்களுக்கு இரண்டு வருட கட்டாய இடைவெளி அறிவுக்குகந்ததாக இல்லை – உச்சநீதிமன்றம்

ஜூலை 16-31

உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம், 1869-இல் இயற்றப்பட்ட விவாகரத்துச் சட்டத்தின்  பிரிவு 10A(1)இன் ஆளுமைப்பற்றி (Validity) விளக்கம் கேட்டுள்ளது. இந்தச் சட்டப்படி, ஒரு கிறிஸ்துவத் தம்பதியர் அவர்களாகவே விவாகரத்திற்கு முயற்சி செய்யும்போது அவர்களுக்கிடையே இரண்டு வருட இடைவெளியிருக்க வேண்டும் என்ற ஷரத்தின் தேவையைப்பற்றி அரசு விளக்கம் கேட்டுள்ளது. பிற மதங்களில் இந்த இடைவெளி ஒரு வருடமாகயிருந்தால் போதும்.

திரு. ஆல்பர்ட் ஆந்தோணி தாக்கல் செய்த  மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் விக்ரம்ஜித்சென், A.M. ஸாப்ரே அடங்கிய நீதிபதிகள் குழு, கிறிஸ்தவ தம்பதியர் பிரச்சினையில், மனமொத்த விவாகரத்திற்கான கட்டாய இடைவெளி இரண்டு வருடங்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை ஆறாவது அறிவிற்கு எட்டியதாக இல்லை என்றும், இதனால் 146 வருடங்களாக பின்பற்றி வரக்கூடிய இந்த விதிமுறையின் ஆளுமையை, பொருத்தத்தை, நீதித்தன்மையைப்பற்றி அரசு தீவிரமாக ஆலோசனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

வழக்குரைஞர் ராஜிவ் ஷர்மா, ஆல்பர்ட் ஆண்டனியின் வழக்குரைஞர்-_கேரள உயர்நீதிமன்றம் இடைவெளிக் காலத்தை ஒருவருடமாகக் குறைத்துள்ளது எனக் குறிப்பிட்டார். ஆனால், கர்நாடகா உயர்நீதிமன்றம் வித்தியாசமானக் கருத்தை வெளியிட்டுள்ளது. புகார் மனு தம்பதியின் விருப்பப்படி, விவாகரத்து செய்வதற்கான ஷரத்துக்கள், இதர சட்டங்களில் _ Section 28 of the Special Marriage Act, 1954, Section 13-B of the Hindu Marriage Act, 1955, and Section 32 B of the Parsi Marriage and Divorce Act, 1936-  இந்தச் சட்டங்களெல்லாம் ஒரு வருட கட்டாய இடைவெளியைத்தான் குறிப்பிட்டுள்ளன. கிறிஸ்தவ சமுதாய மக்களை விவாகரத்து வேண்டுபவர்களை இரண்டு வருட கட்டாய இடைவெளி பாரபட்சமான நிலைக்குத் தள்ளுகிறது _ என்று கூறுகிறது.

மேலும், இவ்வித புகார் மனுவில், மதத்தின் அடிப்படையில் மட்டும்தான், இத்தகைய பாரபட்சம் வேறுபாடு நிலவுகிறது. கிறிஸ்தவர்கள் விவாகரத்துச் சட்டத்தின் ஷரத்துக்கள் 10(A)(1) என்பதால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் _ மனமொத்த விவாகரத்து வேண்டும் என்று விரும்பினால், கட்டாய இரண்டு வருட இடைவெளிக்குத் தயாராயிருக்க வேண்டும். ஆனால், பிற மதத்தினருக்கு ஒரு வருட கட்டாய இடைவெளியிருந்தால் போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு மதத்தினருக்கு, பற்பல பிரிவுக் காலங்கள் ஒரே நாட்டில், ஒரே காரணத்திற்காக அனுமதிக்கப்படுவது முற்றிலும் பாரபட்சமானது, நியாயத்திற்குப் புறம்பானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. விவாகரத்து விரும்புபவர்களைப் பொறுத்தவரையில், இந்தச் சட்டம், மக்களின் அடிப்படை ஜீவாதார உரிமைகளின் வெளிப்படையான பகிரங்க அத்துமீறல் _ என்று இந்த புகார் மனுவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு, உயர்நீதிமன்றங்களின் வித்தியாசமான கோணங்களின் அடிப்படையில், தெளிவான தீர்வுகள் இன்னும் ஏன் வழங்கப்படவில்லை என்று மத்திய அரசைக் கேட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *