மைனர் சிறுமியை மணம் செய்த குற்றத்தில் புதிய தீர்ப்பு

ஜூலை 16-31

17 வயது பெண்ணைத் திருமணம் செய்த குற்றத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டார். அந்தப் பெண், பருவம் அடையும் நிலையிலிருந்ததாலும், அவளாகவே அந்த இளைஞனுடன் தொடர்பு கொண்டு பிறர் பார்வையிலிருந்து மறைந்திருந்ததாலும், அந்த இளைஞன், அவன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளான். Prohibition of Child Marriage Act, Protection of Children from Sexual Offences (POCSO) Act, and the Indian Penal Code(IPC)  என்ற குற்றப்பிரிவுகளிலிருந்து, அந்த இளைஞனை நீதிபதி கவுதம் மேனன் விடுவித்திருக்கிறார்.

அந்தப் பெண் விருப்பத்துடனே இந்தத் தொடர்பு நிகழ்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

அந்த இளைஞன் திருமணத்திற்குமுன் எந்தத் தொடர்பும் வைக்கவில்லை என்று அந்தப் பெண் கூறியுள்ளார். எனவே, வன்புணர்ச்சி அல்லது பாலியல் பலாத்காரம் நடந்துள்ளதாகக் கருத வாய்ப்பில்லை. மேலும், அந்தப் பெண் அவளுடைய விருப்பத்தினால்தான் அவரைத் திருமணம் செய்துள்ளாள். எனவே, குழந்தை திருமணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் நடந்துள்ளது என்பதை நிரூபிக்க முடியாது. அனைத்து சம்பவங்களும் அவள் விருப்பத்துடனே நடந்துள்ளன என்று நீதிபதி கூறினார்.

எனவே, குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம் 2006, IPCJயின் கீழ் கடத்தல், கற்பழிப்பு, POCSO சட்டத்தின்கீழ் வன்புணர்ச்சி என்ற குற்றங்கள் நடந்துள்ளதாக முடிவு செய்ய முடியாது.

அரசுத் தரப்புப்படி, பெண்ணின் தந்தை, 2013, மே மாதம் 15ஆம் தேதியன்று, தன் மகள் குற்றவாளியால் கடத்தப்பட்டதாகப் புகார் மனு அளித்துள்ளார். குற்றவாளியின் தாயார் அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு, இரண்டு மாதங்களுக்குப் பிறகு காவல்நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அதன் பிறகு, அந்த இளைஞன் கைது செய்யப்பட்டிருக்கிறான். மேலும், அந்தப் பெண், அந்த இளைஞனுடன் காதல் தொடர்பிலிருந்ததாகவும், அவன் அவளை மயக்கி ஏமாற்றவில்லை எனவும், தற்போது அவர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் கணவன் மனைவியாக வாழ்ந்து வருவதாகவும், நீதிமன்றத்தில் அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதிபதி அந்த இளைஞனை விடுதலை செய்துள்ளார்.

****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *