இந்தியைத் தாய்மொழியாக்குங்கள்…
சமஸ்கிருதத்தை புனித மொழியாக்குங்கள்…
மகாபாரதத்தை தேசிய நூலாக்குங்கள்…
இராமனை ஒட்டுமொத்தக் கடவுளாக்குங்கள்
பேருந்து நிலையம் ரயில் நிலையம்
விமான நிலையம் மீதமிருக்கும் எல்லாவற்றையும் தனியார் வசம் ஒப்படையுங்கள்…
எங்கள் குடும்ப அட்டை வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை அனைத்தையும் உங்களிடமே ஒப்படைத்துவிடுகிறோம்
தூய்மை இந்தியாவில் ஓடும் உங்கள் கங்கை நதிக்கரையில் நாங்கள் அகோரிகளாக
அலைந்து திரிகிறோம்
– கவிஞர் பழநிபாரதி
Leave a Reply