ஆடுகளின் மீது அன்பை பொழியும் ………..மோடி (2)

நவம்பர் 16-30

இந்தியாவை வல்லரசாக்குவோம், சமத்துவம் படைப்போம் என மேடை போட்டு விளம்பரம் பேசும் மோடியின் குஜராத்தில், அனைத்து சமூகத்தினரும் துப்புரவுப் பணியில் ஈடுபடவில்லை. மாறாக, அங்கும் மனுதரும சிந்தனையின்படி தீண்டப்படாத வால்மீகி சமூகம்தான் துப்புரவுத் தொழிலில் ஈடுபடுகின்றது.

அகமதபாத் நகரத்தை 2031க்குள் கழிவில்லா நகரமாக மாற்றும் தொலைநோக்குத் திட்டம் என்று ஓர் அதிகாரப்பூர்வ ஆவணமொன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின்படி, ஒவ்வொரு மாதமும் 1,10,667 மெட்ரிக் டன் திடக் கழிவை அகமதாபாத் நகரம் வெளியேற்றுவதாகவும், அதில் 1,08,454 மெட்ரிக் டன் அளவுக்கு மனிதர்களே அள்ளுகின்றனர்.

ஆனால்,  துப்புரவுத் தொழிலாளிகளின் பாதுகாப்பு குறித்து எங்கும் தெரிவிக்கப்படவில்லை.

1992ஆம் ஆண்டு குஜராத் அரசு மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழித்துவிட்டதாக அறிவித்தது. 2001ஆம் ஆண்டுதான் மோடி குஜராத்தில் ஆட்சிக்கு வந்தார். 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, 2500 வீடுகளில் மனிதர்களே கையால் மலம் அள்ளும் அவலம் தொடர்வதாக தெரிவிக்கின்றது. மானவ் கரிமா என்னும் ஓர் அமைப்பு நடத்திய ஆய்வு, அகமதாபாத் நகரத்தில் மட்டும், 126 இடங்களில் மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலம் தொடர்வதையும், 188 உலர் கழிப்பிடங்கள் உள்ளதையும் அம்பலப்படுத்தியது. இது குறித்து, தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு ஒரு மனுவைக் கையளித்தது. இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த மோடியின் தலைமையிலான அரசு 1993ஆம் ஆண்டுச் சட்டத்தை எங்கள் அரசு முழுமையாக நடைமுறைப்படுத்துகின்றது என்றும், அதன்படி மனிதக் கழிவை மனிதனே அள்ளும் நிலை குஜராத்தில் இல்லையென்றும் கூறியது. http://www.hindustantimes.com/comment/sitaramyechury/truth-hype-and-the-gujarat-development-model/article1-1132207.aspx

மோடி மாயையை விலக்கி மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் ஏராளம் உண்டு. நடுநிலை ஊடகங்கள் கண்ணை மறைக்கும் காவிப்புழுதியைக் கிளப்பி நம்மை ஏய்க்கப் பார்க்கின்றன. இந்தியாவைக் காப்பாற்ற வந்த அவதாரம் போன்று பிரச்சாரம் செய்யும்  மோடி ஆட்சி செய்த குஜராத்தில் 64 லட்சம் வீடுகளில் கழிவுகளை வெளியேற்றும் சாக்கடை வசதிகள் இல்லை, 52 லட்சம் வீடுகளில் கழிவறைகள் இல்லை. (கேரளாவில் 71% வீடுகளில் கழிவறை வசதிகள் இருப்பதும், பிற மாநிலங்கள் குஜராத்தைவிட முன்னேறியிருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.) கழிவறை வசதிகள் கூட உருப்படியாக இல்லையென்றால், என்ன பொருள்? மோடி ஆட்சி செய்த குஜராத்தில் மக்கள் வெட்ட வெளியில் கக்கா போகின்றார்கள் என்பதுதானே. ஆனால், இதைச் சரிசெய்யும் நோக்கமெல்லாம் இல்லாத மோடிக்கு இருப்பதெல்லாம் காவித் திமிர்தான். அதற்கு உதாரணம் கீழ்க்கண்ட உளறல்.

ஒரு சமூகம் தன் பெண்களை பொதுவில் செல்லும் போது புர்கா அணியச் சொல்கின்றது. ஆனால், அதே பெண்கள் காலைக் கடனைக் கழிக்க காடுகளுக்குத்தான் செல்ல வேண்டியிருக்கின்றது. http://www.thehindu.com/todays-paper/tp-national/article3246715.ece

மேற்கண்ட உளறலில் இஸ்லாமிய சமூகத்தை இழிவுப்படுத்தும் மோடி, தலித் மக்களைத் துப்புரவுத் தொழிலில் தள்ளிய பார்ப்பனியத்திற்கு எப்படி விளக்குப் பிடிக்கின்றார் தெரியுமா?

தலித் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்-களுக்காக மட்டும் துப்புரவுப் பணிகளைச் செய்து வருகின்றார்கள் என்று நான் நம்பவில்லை. அது, வாழ்வாதாரத்திற்கானதாக இருந்திருந்தால் தலைமுறை, தலைமுறையாக அதே தொழிலைச் செய்து வந்திருக்க மாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட கால-கட்டத்திற்குப் பிறகு யாராவது ஒருவருக்கு திடீர் அறிவொளி வந்து, நாம் செய்யும் தொழில் ஒட்டுமொத்த சமூகம் மற்றும் கடவுளின் மகிழ்ச்சிக்கானது. ஆகையால், கடவுளால் அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தொழிலை, பல நூற்றாண்டுகளாக ஒரு ஆன்மீகப் பணியாகவே செய்து வருகின்றார்கள். அதனால்தான், தலைமுறை தாண்டியும் அவர்கள் மட்டும் செய்யும் தொழிலாகவே நீடிக்கின்றது. எனவே, வேறுவழியில்லாமல், வேறு தொழிலில்லாமல் இந்தத் தொழிலை மேற்கொண்டார்கள் என்பது நம்புவதற்குரியதாக இல்லை. (கர்மயோக் நூலின் 48-49 ஆவது பக்கத்தில்) http://www.countercurrents.org/gatade161013.htm என்ன திமிர்? கழிவறை கட்ட வக்கில்லாத ஒருவர், தன் ஆளுகைக்குட்பட்ட பெண்களை இழிவுப்படுத்தும் முறையைப் பார்த்தீர்களா? தலித் மக்களின் வலியை ஏதோ அவர்கள் வாங்கி வந்த வரம் போலத் திரிக்கும் கயமைத்தனத்தையும் பாருங்கள். கேட்டால் சிறந்த நிர்வாகியென்று மோடியின் தமிழ்நாட்டுத் தரகர்கள் ஊரெங்கும் கூவிக் கொண்டு திரிகிறார்கள். இந்த மோடிதான் ஒளிரும் குஜராத்தை உருவாக்கியிருக்கிறாராம்.

அதையெல்லாம் விடுங்கப்பா, என்ன இருந்தாலும் இந்த அர்ச்சகர் திட்டம் வரவேற்கத்தக்கதுதானே என்று சிலர் இன்னும் மோடியின் காவிக் கொடிக்குக் கையசைத்துக் கொண்டிருக்கலாம். வால்மீகி சமூகத்தை அர்ச்சகராக்கும் திட்டத்தை அமல்படுத்தும் மோடிக்கு அந்தச் சமூகத்தின் மீது எந்தப் பெரிய அக்கறையுமில்லை என்று புரிந்து கொள்ள மேலும் சில தரவுகளையும் நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்.

1.    நவ்ஷ்ர்ஜன் என்னும் அமைப்பு 2010 ஆம் ஆண்டு 1589 கிராமங்களை ஆய்வு செய்தது. அவற்றில் 98 விழுக்காடு கிராமங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்-படுகின்றது.

2.    நாட்டைத் தூய்மைப்படுத்தும் அர்ச்சகர்கள் என்று மேடையில் புகழும் மோடியின் அரசின்கீழ் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அரசு வேலைகூட கிடையாது. பெரும்பாலானவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான். ஊதியமோ மாதம் நாளைக்கு 50_-100 ரூபாய்தான் கொடுக்கிறாங்க. http://www.ritimo.org/article4797.html

3.    முடிவெட்டுவதற்குக் கூட ஜாதி பார்க்கும் குஜராத்தின் ஜாதி இந்துக்கள் கொடுக்கும் மன உளைச்சல் தாளாமல் 200 குடும்பங்கள் பௌத்தத்திற்கு மாறியிருக்-கின்றார்கள். http://archive.indianexpress.com/news/became-buddhist-for-haircut-shave…-mental-untouchability-persists/1185035/0

4.    தலித் குழந்தைகள் துப்புரவு வேலை செய்ய பணிக்கப்படுகின்றார்கள். https://www.youtube.com/watch?v=7dxWuJw4pYY

5.    ஒரு தலித் மைனர் பெண் வன்புணர்ச்சிக்குள்ளானதைக் கண்டித்து தலித் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் காவல்-துறை லத்தி சார்ஜ் செய்கின்றது.

http://www.mulnivasisangh.com/delhi-protests-vs-gujarat-protests/
http://zeenews.india.com/bbv/dalit-minor-girl-gang-raped-in-gujarat_877796.html

6.    ஒரு தலித் குடும்பத்தை ஊரை விட்டுக் காலி செய்யச் சொல்லியது ஆதிக்க ஜாதிப் பஞ்சாயத்து.
http://timesofindia.indiatimes.com/city/jaipur/Caste-panchayat-ostracises-13-dalit-families-in-Bhilwara/articleshow/21663904.cms

7.    குஜராத் மற்றும் ராஜஸ்தானில் செய்யப்பட்ட ஆய்வு, 90 விழுக்காடு தலித் குழந்தைகள் மருத்துவத்தின் போதும், 80 விழுக்-காடு தலித் குழந்தைகள் ரத்தப் பரிசோதனை போன்ற மருத்துவப் பரிசோதனைகளின் போதும் பாகுபாடுகளுக்கு உள்ளாகியிருக்-கின்றனர் என்று தெரிவிக்கின்றது.

8.    2010 ஆம் ஆண்டு யுனிசெப் நிறுவனம் நடத்திய ஆய்வில் 1298 தடவை மருந்து வழங்கப்பட்ட குழந்தைகள், 1181 தடவை பாகுபாடுகளுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள். 10 இல் 6 தடவை தலித் குழந்தைகள் பாகுபாடு-களுக்கு உள்ளாகின்றார்கள் என்றும் தெரிவிக்கின்றது.

http://www.firstpost.com/politics/left-out-in-narendra-modis-inclusive-politics-dalits-in-gujarat-1184031.html

9.    தலித் மக்களுக்கு மோடியின் குஜராத்தில் குடிக்கத் தண்ணீர் இல்லை. இது குறித்துக் குரல் கொடுத்தால் மேல்ஜாதி மக்களின் முதல்வரான மோடிக்குக் களங்கம் ஏற்பட்டுவிடும். இதன் காரணமாக எங்களை அவர்கள் தாக்கக்கூடும் என்பதால் மவுனம் காத்ததாகச் சொல்கிறார்கள். http://timesofindia.indiatimes.com/city/rajkot/In-Modis-Gujarat-no-Narmada-water-for-dalits/articleshow/19470304.cms

இன்னும் அச்சில் ஏறாத, இங்கே பட்டியலிடப்படாத, பொதுவெளிக்கு வராத கொடுமைகள் ஏராளம் குஜராத்தில் உண்டு. ஒவ்வொரு ஜாதியும், ஒரு தேசமாக இருக்கின்றதென்றார் அண்ணல் அம்பேத்கர். அதற்கு குஜராத்தொன்றும் விதிவிலக்கல்ல. இந்தக் கோரமான உண்மையை மறைக்கத்தான் இந்து முஸ்லீம் கலவரமும், இந்து ஒற்றுமையும் இந்துத்துவக் கும்பலால் கோரப்படுகின்றது.

எப்பொழுதெல்லாம் தலித் மக்களோ, பிற்படுத்தப்பட்டவர்களோ தமது உரிமைக்காகப் போராடத் தொடங்கு-கின்றார்களோ அப்பொழுதெல்லாம் ஒரு மதக்கலவரத்தை ஏற்படுத்தி தம் உரிமைகள் மீதான கவனத்திலிருந்து ஒடுக்கப்-பட்டவர்-களைத் திசை திருப்பி, இஸ்லாமியர்-களைப் பொது எதிரியாக்கி தம் சகோதரர்களை வெட்டிச் சாய்க்கச் செய்து, வாக்கு சேகரித்துக் கொள்ளும் இந்துத்துவ கும்பல். (எ.கா: மண்டல் கமிசன் அறிக்கைக்குப் பின்பாக பாபர் மசூதி இடிக்கப்பட்டதும், இந்து முஸ்லீம் கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டதும்).

தலித் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். கார்ப்பரேட்டுகளாலும், காவித் தீவிரவாதக் கும்பலாலும் ஊதிப் பெருக்கப்படும் மோடியின்

பலூனில் ஊசியை ஏற்றி அதை உடைக்கும் கூடுதல் பொறுப்பு தலித் மக்களுக்கு இருக்கின்றது.

2011ஆம் ஆண்டு மக்கள்தொகை, 25 விழுக்காடு தலித் மக்கள் மற்றும் பழங்குடி-யினர்களின் என்ணிக்கை இருப்பதாகத் தெரிவிக்கின்றது. தெகல்காவின் கட்டுரையின்-படி இதுவரை 12 விழுக்காடு தலித்துகளின் வாக்குகளை பா.ஜ.க. மட்டுமே பெற்றிருக்-கின்றது.

http://archive.indianexpress.com/news/scs-sts-form-25–of-population-says-census-2011-data/1109988/

அது மட்டுமல்லாமல் 189 தொகுதிகளில் வெற்றி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றல் முஸ்லிம்களுக்கு இருக்கின்றது என்றும் தெகல்காவின் ஆய்வு தெரிவிக்கிறது. http://www.tehelka.com/narendra-modis-plan-for-dalits-and-muslims/ ஆனாலும், மோடி கும்பல் ஆட்சிக்கு வந்திருக்கிறது என்றால், என்ன பொருள், பிற மக்கள் திரள் காவிமயமாகி வருவதைத்தானே இது காட்டுகின்றது. அவர்களை  காவி மயமாக்கியதன் மூலம், மோடி அரசு செய்யும் அனைத்தையும் ஆதரிக்கும் மனநிலைக்கு மக்களை தயார்படுத்தும் வேலையை ஆட்சிக்கு வந்த பிறகும் செய்து வருவதன் அறிகுறிதான், ஆடம்பரமான, கவர்ச்சியான அறிவிப்புகள். இப்படியான ஆதரவு மனநிலையை உருவாக்கு-வதன் மூலம், நாட்டில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது, பொதுத்துறை நிறுவனங்களை விற்பது உள்ளிட்ட உழைக்கும் மக்கள் விரோத  நடைமுறைகள்  எதிர்ப்பின்றி நடைமுறைக்கு வரும். மேக் இன் இந்தியா  என்கிற பெயரில் இந்தியாவை குப்பை காடாக்கினாலும், சுவச்ச பாரத் துடைப்பத்தோடு தெருமுக்குல குப்பை இல்லாத இடத்த கூட்டிகிட்டே பாரத் மாதா கி ஜெய்னு ஒரு கூட்டம் சொல்லும். இந்த மயக்க மனநிலையிலிருந்து மக்களை மீட்டெடுப்பதோடு, சுவச்ச பாரத் பெயரில் சுத்தத்தை கோரும் கும்பலை துடைத்தெறிந்து நாட்டை சுத்தப்படுத்துவது என்ற நம் கடமையின் அவசியத்தை உணர்ந்து தொடர்ந்து செயல்படுவோம். நம் போராட்டம் நிச்சயம் வெல்லும்.

– சிற்பா அம்பேத்கர்

currentisuue

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *