ஜாதி மற்றும் வர்க்க வேறுபாடுகளே காரணம்

செப்டம்பர் 01-15

ஆனந்த் பட்வர்த்தன்

சென்னை தமிழ் ஸ்டுடியோ அமைப்பு ஆண்டுதோறும் வழங்கிவரும் மாற்றுத் திரைப்படங்களுக்கான வாழ்நாள் விருதான எடிட்டர் லெனின் விருதை இவ்வாண்டு ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தனுக்கு வழங்கியது. மும்பையிலிருந்து இயங்கும் ஆனந்த் பட்வர்த்தன், ஜாதி – மதவாதத்திற்கு எதிராகவும், சுற்றுச் சூழலுக்கு ஆதரவாகவும் ஆவணப்படங்களை உருவாக்கி, வெளியிடும் துணிச்சல்காரர்.

விருது பெறுவதற்காக சென்னை வந்த ஆனந்த், ஜாதி மற்றும் வர்க்க வேறுபாடுகளே நம் நாட்டில் நடக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான மூல காரணம். வர்க்க அடுக்கில் மேல் உள்ளவர்கள் ஜாதியின் பெயரால் உழைக்கும் மக்களைப் புரிந்து வைத்துள்ளனர். எனவே, இரண்டு பிரச்சினைகளுக்கு எதிராகப் போராடும் ஜாதிய எதிர்ப்பாளர்களும் மார்க்ஸ் கொள்கையில் ஈர்ப்புடையவர்களும் இணைந்தால் புரட்சி சாத்தியம் என்று தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு உண்மை இதழுக்குப் பேட்டி வழங்கியிருந்த அவரை இந்நிகழ்வை ஒட்டிச் சந்தித்த போது, பெரியார் பற்றிய நூல்களைத் தாம் ஆர்வத்துடன் படித்துவருவதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *