இத்தாலியின் பார்வையில் விடுதலைப் புலிகள்

மார்ச் 16-31

 

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தமிழ்த் தேசிய செயல்வீரர்கள் 2008ஆம் ஆண்டு சேகரித்து வழங்கியது பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரானது என்று கருதி கைது செய்யப்பட்டனர். 2010ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், 2011ஆம் ஆண்டு அவர்கள் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பினை எதிர்த்து இத்தாலி அரசு மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு சென்ற மாதம் பிப்ரவரி 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. 9 நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஜெனீவா சாசனங்களுக்குட்பட்ட ஒரு விடுதலை இயக்கமாகவே பார்க்க வேண்டும். இதைப் பயங்கரவாத இயக்கமாகப் பார்க்க முடியாது. எனவே, கீழ் நீதிமன்றத் தீர்ப்பைத் தாமும் உறுதிப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதனிடையே, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், சூடானில் மேற்கொள்ளப்பட்டது போன்று இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள் எவ்வாறான அரசை விரும்புகின்றனர் என்பது குறித்து கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *