Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பிஞ்சுகளைப் பலி வாங்கிய ஊர்வலம்

சென்னை _ திருச்சி நெடுஞ்சாலையில் வேப்பூருக்கும் உளுந்தூர்பேட்டைக்கும் நடுவில் உள்ளது ஆதனூர் கிராமம். 11.9.2013 அன்று மூன்று மணிக்குத் தொடங்கிய பிள்ளையார் ஊர்வலத்தின்போது, கல் ஏரிக்குச் சென்று கரைக்கப் போறோம். வர்றவங்க ஏறி வேன்ல பிள்ளையார் பக்கத்தில் உட்காருங்க என்று ஒர் இளைஞன் சொன்னதும் சிறுவர்கள் ஓடிச் சென்று ஏறினர்.

வழக்கமாக 2, 3 காகிதப் பிள்ளையார் இருக்கும் கிராமத்தில் இந்த ஆண்டு 7 பிள்ளையார் கள் உருவெடுத்திருந்தனர். அதில் மூன்றைக் கொண்டு சென்று கரைத்துவிட்டுத் திரும்பினர். சென்ற சிறுவர்களுள் எதிர் எதிர் வீட்டில் வசிக்கும் 9 வயது கணேச மூர்த்யையும் 14 வயது சந்தோஷ்குமாரும் வீட்டிற்கு வரவில்லை. எங்கே சென்றாலும் ஒன்று போல் செல்லும் இவர்களைக் காணாமல் ஏரிக்குத் தேடி ஓடினர்.

பூக்கள், மாலைகள், காகித அட்டைகளுடன் இரண்டு பிஞ்சுகளும் மிதந்து கொண்டிருந்ததைப் பார்த்த பெற்றோரும் உறவினர்களும் ஊராரும் கதறி அழுதுள்ளனர்.