உயர் கல்வியின் நிலை

அக்டோபர் 01-15

மக்கள் தொகைப் பெருக்கத்திற்கேற்ப கல்வி நிறுவனங்களும, பல்கலைக்கழகங்களும் அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றன. மத்திய அரசும் உயர் கல்விக்காக பல ஆயிரம் கோடி ரூபாயைச் செலவுசெய்து வருகிறது.

எனினும், உலக அளவில் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் டில்லி அய்.அய்.டி.க்கு 222ஆவது இடமே கிடைத்துள்ளது.

முதலிடத்தில் அமெரிக்காவின் மாசாசூட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும், இரண்டாமிடத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகமும், மூன்றாமிடத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் இருப்பதாக லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் குவாகுரேலி சைமன்ட்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மும்பை அய்.அய்.டி. 233ஆம் இடத்தையும் சென்னை அய்.அய்.டி. 331ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. ஆசிய அளவில் ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் முதல் இடத்தையும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும், ஹாங்காங் பல்கலைக்கழகமும் இரண்டாம் இடத்தையும், சியோல் தேசிய பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. டில்லி அய்.அய்.டி. 38ஆம் இடத்தையும் மும்பை 39ஆம் இடத்தையும் சென்னை 49, கான்பூர் 51, காரக்பூர் 58, ரூர்க்கி 66ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.

இந்தியாவில் 600க்கும் அதிகமாக பல்கலைக்கழகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *