துளிச் செய்திகள்

அக்டோபர் 01-15
  • உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நாகப்பன் செப்டம்பர் 19 அன்று பொறுப்பேற்றுள்ளார்.
  • டெல்லி மாணவி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் செப்டம்பர் 12 அன்று தீர்ப்பளித்துள்ளது.
  • தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்ற வழக்கு, சொத்து விவரங்களை வேட்பு மனுவில் மறைத்தால் மனுவை அதிகாரிகள் தள்ளுபடி செய்யலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
  • அணு ஆயுதங்களை ஏந்திக் கொண்டு கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணையின் சோதனை இரண்டாவது முறையாக செப்டம்பர் 15 அன்று வெற்றி பெற்றுள்ளது.
  • எய்ட்ஸ் நோயை உருவாக்கும் கிருமிகள் தங்களைத் தாங்களாகவே அழித்துக் கொள்ளும் தாவெய் என்ற மூலக்கூறை அமெரிக்காவின் டெக்சஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *