சீனாவை முந்தும் இந்தியா

ஜூலை 01-15

உலக அளவில் தற்போது 720 கோடியாக உள்ள மக்கள்தொகை 2025ஆம் ஆண்டில் 810 கோடியாகவும் 2050ஆம் ஆண்டில் 960 கோடியாகவும் இருக்கும். வளரும் நாடுகளில் இந்த மக்கள்தொகை அதிகரிப்பு விகிதம் இருக்கும்.

இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா மற்றும் நைஜீரியா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் மக்கள் தொகையானது 2 மடங்கு அதிகரிக்கும். இந்தியாவில் இந்த நூற்றாண்டில் மக்கள்தொகை 160 கோடியைத் தாண்டும். அதே நேரத்தில் சிறிதளவு குறைந்து 150 கோடியாக இருக்கும்.

சீனாவைப் பொறுத்தவரை இந்த நூற்றாண்டின் இறுதியில் (2100ஆம் ஆண்டு) சீராகி 110 கோடியாக மாறும். தற்போதைய நிலவரத்தின்படி 2028ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை சீனாவைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அய்க்கிய நாடுகள் சபை நியூயார்க்கில் வெளியிட்ட உலக மக்கள்தொகை குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *