Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

எச்சரிக்கை புகையும் மாணவர்கள்

இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் 50 சதவிகிதமாக இருந்த புகைப்பழக்கம் தற்போது 20 சதவிகித மாகக் குறைந்துள்ளது. ஆனால், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் 24 சதவிகித ஆண்கள் புகையிலை மற்றும் புகைப்பழக்கத்திற்குஅடிமையாகியுள்ளனர். பெண்களில் 8 சதவிகிதமும்; 11 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவர்களில் 3 சதவிகிதமும் புகைப் பழக்கத்துக்கு அடிமை யாகியுள்ளனர். இதனைத் தடுக்கும் கடமை பெற்றோர் களுக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ளது. எனவே, அவர்கள் குழந்தைகள்முன் புகையிலை உபயோகிக்கக் கூடாது.

குழந்தைகளிடையே புகையிலை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.அரசுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இதனைத் தடுப்பதில் பங்கு உள்ளது என்று அடையாறு புற்றுநோய் ஆய்வு மய்யத்தின் தலைவர் வி.சாந்தா கூறியுள்ளார்.