Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தோழா வா தோழா

நாம் கோவில் மணி கூட்டமில்ல

வீரமணி கூட்டமடா

தன்மானமுள்ள கூட்டமடா

தோழா வா தோழா

நாம் தறிகெட்ட கூட்டமில்ல

பெரியாரின் கூட்டமடா

பகுத்தறிவுள்ள கூட்டமடா

ஈரோட்டுச் சிங்கம், இனமானத் தங்கம்

பெரியரின் வழி செல்லடா

வடநாட்டுச் சாமி, தென்னாட்டுச் சாமி

எல்லாமே வெங்காயம்டா

ராமர் சாமி கோவில் விட்டு

ராமசாமி கிட்ட வந்து

தடியால அடி வாங்குடா

வாழ்வில் முன்னேர படி வாங்குடா!

கை ரேக பாத்தான், கிளி பேச்ச கேட்டான், கம்பியூட்டரு கிட்ட போயி

ஜோசியம் பாக்குறான்!

பாதையோர கல்ல செங்கல் சாமியின்னு பொட்டு வச்ச் பூவும் வச்சு உண்டியல் நீட்டுரான்!

பெருமால் கோவில் உள்ள போயி கோவிந்தான்னா என்ன தந்தது

பூணூல் போட்டவன் தொப்ப பெருக தமிழன் நெற்றியில் நாமம் வந்தது

தெரிஞ்சும் திருந்தலையே!  பிள்ளையார் பக்தன் நம்ம தெரு குப்பன் அடி பட்டு செத்த லாரியில்

பிள்ளையாறு தொண

மூளைக்குதான் வேலை கொடுக்காததால மத காடு ஆச்சு நாடு இப்ப

வந்தது வெண

ராக்கெட் விடும் காலத்துல இராகு காலம் பாக்குறாண்டா

ரேப்பு கேசு சாமிகிட்ட புள்ள வரம் கேக்குறாண்டா

தெரிஞ்சும் திருந்தலையே!

– நா.முத்துகுமார்