இதுவே சான்று…!

அக்டோபர் 16-31

பாதிரியார் ஒருவருடனான விவாதத்தின் போது கூறினார் :

கடவுள் மனிதனை தன்னைப் போலவே படைத்தார்… வெகு காலமாகவே அனைத்து மதங்களுமே கடவுள் மனிதனை தன்னை போலவே படைத்தார் என்பதில் ஒத்து இருக்கின்றன..

இயல்பாக ஒரு வாதத்தை அவர் முன் வைத்தேன்…

மனிதனது உடலும் உடலுறுப்புகளும் பரிணாமத்தில் அவனது வாழ்வியல் போராட்டத்தின் , வாழ்வியல் தேவையின் பொருட்டு வடிவமைந்தது…  (உ.ம் முன்னங்கால்கள் கைகளாக பரிணமித்த பிறகு, கட்டை விரல் தனியாக பிரிந்தது , கைகளின் தேவையின் பொருட்டு )

எந்த உடல்பாகமும் தோரணைக்காக அமைந்தது கிடையாது , எல்லா உயிரினங்களுக்கும் அப்படியே…

பிரபஞ்ச வெளியில் நிறைந்திருப்பதாக சொல்லப்படும்

கடவுள் , மனிதனை போலிருக்கிறாரென்றால்..

இயல்பாக ஒரு கேள்வி எழுகிறது..

கடவுளுக்கு எதற்கு சிறுநீரகங்கள்?

கடவுளுக்கு எதற்கு இனப்பெருக்க உறுப்பு?

கடவுளுக்கு எதற்கு ஆசனவாய்?

கடவுளுக்கு எதற்கு சுவாசக்குழாய் , உணவுக்குழாய்

சிறுகுடல், பெருங்குடல் , நுரையீரல், இதயம், கைகள் ,கால்கள் எல்லாம் …?

கடவுளுக்கு இதெல்லாம் இருக்க வேண்டிய வாழ்வியல் தேவை என்ன?

மனிதனே கடவுளை படைத்தான் என்பதற்கு இதுவே சான்று…

வாதத்தைக் கேட்ட அவர் ஒரே பதில் கூறினார்..

பரம்பொருளையே கேள்வி கேட்கிறீர்களா நீங்கள் ?..

 

– அருண் பகத் (தனது முகநூல் பக்கத்தில்..)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *