நிகழ்ந்தவை

ஆகஸ்ட் 01-15
  • புகழ்பெற்ற இந்தியக் குத்துச் சண்டை வீரர் தாராசிங் (வயது 83) ஜூலை 12 அன்று மரணமடைந்தார்.

  • தமிழ்க் கணினி உலகிற்குப் பெரும் பங்களிப்பை நல்கிய சாஃப்ட் வியூ கணினிக் கல்வியக நிறுவனரும் தி.க.வின் பெரியார் விருது பெற்றவருமான ஆண்டோ பீட்டர் (வயது 45) ஜூலை 12 அன்று திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார்.
  • தற்போதைய குடியரசுத் துணைத்தலைவர் ஹமீத் அன்சாரியே மீண்டும் அப்பதவிக்கு அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று ஜூலை 14 அன்று அறிவிக்கப்பட்டது.
  • தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை ஜூலை 14 அன்று நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆணையிட்டது.
  • இந்திய விண்வெளி வீராங்கணை சுனிதா வில்லியம்ஸ் ஜூலை 15 அன்று கஜகஸ்தான், பைகானூர் விண்கல ஏவுதளத்திலிருந்து விண்வெளிக்குப் புறப்பட்டார்.இது இவரது இரண்டாவது பயணமாகும்.
  • இந்தியக் குடிஅரசுத் துணைத்தலைவருக்கான தே.ஜ.கூட்டணி வேட்பாளராக ஜஸ்வந்த் சிங் போட்டியிடுவார் என ஜூலை 16 அன்று அறிவிக்கப்பட்டது.
  • சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் தனிநீதிமன்ற நீதிபதியின் நியமனத்தை எதிர்த்து முதலமைச்சர் ஜெயலலிதா,சசிகலா ஆகியோர் தொடர்ந்த வழக்கை ஜூலை 17 அன்று பெங்களூரு தனி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  • 13 ஆவது இந்தியக் குடிஅரசுத் தலைவருக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூலை 22 அன்று நடந்தது.இதில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தே.ஜ.கூட்டணி வேட்பாளரை விட , அய்.மு.கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி 69 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். மத்திய அரசின் நீர்வள ஆணையத்தின் மேற்பார்வையில் முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள உச்சநீதிமன்றம் ஜூலை 23 அன்று அனுமதி அளித்தது
  • நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய கேப்டன் லட்சுமி (வயது 97) ஜூலை 23 அன்று காலமானார்.

  • இந்தியாவின் 13 ஆவது குடி அரசுத்தலைவராக பிரணாப் முகர்ஜி ஜூலை 25 அன்று பொறுப்பேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *