சிறைக் கைதிக்கு இருக்கும் விடுதலை படிக்கும் ஆர்வம்!

ஆகஸ்ட் 01-15

பாளையங்கோட்டையில் ஆயுள் கைதியாக இருந்த தோழர் ஒருவர் அக்டோபர் 1980ல் எழுதிய ஒரு மடல்.

எனது பெருமதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய மானமிகு அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கு மானமிகு தம்பி அ.பக்கிமுகம்மது எழுதும் விவரம். வணக்கம். அய்யா, நான் ஆயுள் தண்டனையில் இருக்கிறேன். 12 வருஷம் ஆகிறது: அப்படி இருந்தும் பகுத்தறிவுப் பணிக்கு வேன் நிதிக்காக என்னால் முடிந்த அளவு ரூபாய் 15 அனுப்பி இருக்கிறேன். தாங்கள் பெற்றுக் கொண்டதற்கு உடன் கடிதம் எழுதுமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டுகிறேன். விடுதலை இதழ் வந்து கொண்டு இருக்கிறது. மிகவும் நன்றி.

_ அ.பக்கிரிமுகம்மது,
சி.என்.ஓ.2640,  மத்திய சிறை, பாளை

குறிப்பு: சிறையிலே உடல் இருந்தாலும் அந்த ஆயுள் கைதியின் சிந்தனை விடுதலை படிப்பதில் சிறகடித்துப் பறக்கிறது. இங்கு வெளியிலே உலவிக் கொண்டிருக்கும் மனிதர்களில் எத்தனையோ பேர் விடுதலை படிக்கும் தன்மையின்றிச் சிந்தனை முடங்கிய சிறையிலே ஆயுளைக் கடத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *