Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பரிதிமாற்கலைஞர்

பிறந்த நாள்: 06.07.1870

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர் பரிதிமாற்கலைஞர். சூரியநாராயண சாஸ்திரியார் என்ற இயற்பெயர் பெற்ற இவர் பரிதிமாற் கலைஞர் எனப் புனைப்பெயர் கொண்டார். அந்தணர் குடும்பத்தில் பிறந்த இவர் ஆற்றிய தமிழ்த் தொண்டு குறிப்பிடத்தக்கது. முப்பத்திரண்டே ஆண்டுகள் வாழ்ந்த இவர், தமிழுலகில் பெருஞ்சாதனையைச் செய்தார்.

தனித்தமிழ் இயக்கம் தோன்றுவதற்கு முன்பே தன் பெயரைப் பரிதிமாற் கலைஞர் என மாற்றிக் கொண்டார். இவருடைய சங்கத்தமிழ் கண்டு வியப்புற்ற சி.வை.தாமோதரம் பிள்ளை, இவரைத் திராவிட சாஸ்திரி என்று பாராட்டினார்.

தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழி என்று முதன்முதலாக நிலைநாட்டியவர் பரிதிமாற் கலைஞர்தாம்.